தண்ணீர்..



உறவுகள் விட்டுப்போன எனக்கு
சொட்டும் நீரும் தேனாய்;
எட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்தால் கொஞ்சும் நீர்
என் தொண்டைக்குழியை நனைக்கும்!

தரையைத் தொடும்
தண்ணீர் விரயமாக;
உணவுக்கு ஏங்கும்
எனக்குக் கிரயமாக!
சேமிக்காத் தண்ணீரால்
தாகித்துவிடுவாய்;
வாசிக்க மட்டும்தான் இருக்கும்
வருங்காலத்தில் சேமிக்காவிட்டால்!

மண்ணையும் மனதையும்
ஈரமாக்க மறைக்கொடுத்த
மா கிருபை- சேர்த்துக்கொள்
சோற்றுக்கு மாற்றமாய்;
வயிற்றை நிரப்பாவிட்டாலும்
நனைத்தாவதுப் போகும்!

அதிசயம் ஒன்றுமில்லை;
தாகித்து தொண்டைக்கிழிய தர்கித்து;
சண்டைப்போட உலகம்
காத்துக்கொண்டிருக்கிறது
மூன்றாம் உலகப்போருக்கு!


உறவுகள் விட்டுப்போன எனக்கு
சொட்டும் நீரும் தேனாய்;
எட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்தால் கொஞ்சும் நீர்
என் தொண்டைக்குழியை நனைக்கும்!

தரையைத் தொடும்
தண்ணீர் விரயமாக;
உணவுக்கு ஏங்கும்
எனக்குக் கிரயமாக!
சேமிக்காத் தண்ணீரால்
தாகித்துவிடுவாய்;
வாசிக்க மட்டும்தான் இருக்கும்
வருங்காலத்தில் சேமிக்காவிட்டால்!

மண்ணையும் மனதையும்
ஈரமாக்க மறைக்கொடுத்த
மா கிருபை- சேர்த்துக்கொள்
சோற்றுக்கு மாற்றமாய்;
வயிற்றை நிரப்பாவிட்டாலும்
நனைத்தாவதுப் போகும்!

அதிசயம் ஒன்றுமில்லை;
தாகித்து தொண்டைக்கிழிய தர்கித்து;
சண்டைப்போட உலகம்
காத்துக்கொண்டிருக்கிறது
மூன்றாம் உலகப்போருக்கு!

1 comment:

  1. தாகமெடுக்கு போது தான் தண்ணீரின் அருமை புரியும். அது வரை யாரும் கவனிக்க் போவதில்லை.

    ReplyDelete