கறுத்த முடிகள்
நகைத்து வெளுத்து;
திமிர் கொண்டத் தோள்கள்
தளர்ந்துத் துவண்டு;
பளப்பளத்தத் தோல்கள்
பள்ளம் மேடுக் காட்சியோடு!
என்னோடு நீ
கழித்தக் காலம்;
எத்தனையோ முறை
உன் மனதை நான்
கிழித்தக் கோலம்;
நான் இழைத்தப் பிழைக்கு;
நீ கேட்ட மன்னிப்புகள்;
திரும்பிப் பார்த்தாலேத்
திகைப்பாய்;
விழிகளுக்கு மலைப்பாய்!
வெட்கிக் குனிகிறேன்
வேதனையில்;
கர்வம் துடைத்து;
விழிகளால் விழைந்து;
மனதால் அழுது;
மன்னிப்புக்கேட்கிறேன்;
மணம் முடிக்க
மணக்கூலிக் கேட்டு
உறவை மாசுப்படுத்தியதற்கு;
அன்று நான்
உன் விழிகளைத்
தூசுத் தட்டியதற்கு!