பணம் மட்டுமே


அலையும் 
மானிடத்தின்
காகித தேவைகள்;
மானுடத்தையே 
அலையவிட்ட 
காகிதம்!

பிறப்பிலிருந்து
இறப்புவரை
இறுக்கிப்பிடித்தவாறு
காகிதம்;
சில காகிதங்களுக்கு
காணமல் போகும்
மானுடத்தின் மாண்புகள்!

காகிதம் விழுந்த
குப்பைத்தொட்டிகளும்
மதிப்பு மிகுந்து;
குப்பைகளாக மாற்றும்
மானிடத்தை
காகித தேவை!

அடிப்படை தேவைகளும்
காகிதத்தின் அடியில்
சிக்குண்டதால்;
சிக்கிதான் தவிக்கிறது
மானிடத்தின்
அடிப்படை அன்புகளும்
அரவணைப்புகளும்!

இறந்த தலைவர்கள்
புன்னைகையோடு
பூரித்தாலும் காகிதத்தில்;
புன்னகைக்காக
மானுடம்
காகிதங்களை தேடி!

பெரிதல்ல காகிதமென
காது கிழிய
கத்தினாலும் – தினம்
காகிதத்திற்காக
குற்றுயிரும்
கொலையுருமாக
மானுடம்!

உறவுகள்
முகம் பார்த்து
பூரிப்பதும்;
முகம் உடைத்து
முறிப்பதும்
முழு காரணியுமாக
முணகலுடன் காகிதம்!

பெற்றோரும்; உற்றாரும்
உற்று நோக்கும் காகிதம்;
பெயருக்குதான்
மூன்றெழுத்தில் பணம்;
செல்லாத இடங்களிலும்
செல்லுபடியாகும்
இவைதான் நிர்ணயிக்கின்றன
மானுடத்தின் மனதில்
புன்னகையா; பூகம்பமா என!

சொந்தங்களின் சோதனை;
இரத்தப்பந்துக்களின்
தோரணை;
உடல் நிலையில் வேதனை;
எடை குறைந்த
காகிதங்களால்;
எடை மிகுந்துபோய்
மனவேதனையில்
மானுடம்!



அலையும் 
மானிடத்தின்
காகித தேவைகள்;
மானுடத்தையே 
அலையவிட்ட 
காகிதம்!

பிறப்பிலிருந்து
இறப்புவரை
இறுக்கிப்பிடித்தவாறு
காகிதம்;
சில காகிதங்களுக்கு
காணமல் போகும்
மானுடத்தின் மாண்புகள்!

காகிதம் விழுந்த
குப்பைத்தொட்டிகளும்
மதிப்பு மிகுந்து;
குப்பைகளாக மாற்றும்
மானிடத்தை
காகித தேவை!

அடிப்படை தேவைகளும்
காகிதத்தின் அடியில்
சிக்குண்டதால்;
சிக்கிதான் தவிக்கிறது
மானிடத்தின்
அடிப்படை அன்புகளும்
அரவணைப்புகளும்!

இறந்த தலைவர்கள்
புன்னைகையோடு
பூரித்தாலும் காகிதத்தில்;
புன்னகைக்காக
மானுடம்
காகிதங்களை தேடி!

பெரிதல்ல காகிதமென
காது கிழிய
கத்தினாலும் – தினம்
காகிதத்திற்காக
குற்றுயிரும்
கொலையுருமாக
மானுடம்!

உறவுகள்
முகம் பார்த்து
பூரிப்பதும்;
முகம் உடைத்து
முறிப்பதும்
முழு காரணியுமாக
முணகலுடன் காகிதம்!

பெற்றோரும்; உற்றாரும்
உற்று நோக்கும் காகிதம்;
பெயருக்குதான்
மூன்றெழுத்தில் பணம்;
செல்லாத இடங்களிலும்
செல்லுபடியாகும்
இவைதான் நிர்ணயிக்கின்றன
மானுடத்தின் மனதில்
புன்னகையா; பூகம்பமா என!

சொந்தங்களின் சோதனை;
இரத்தப்பந்துக்களின்
தோரணை;
உடல் நிலையில் வேதனை;
எடை குறைந்த
காகிதங்களால்;
எடை மிகுந்துபோய்
மனவேதனையில்
மானுடம்!


வண்ணப்படத்திற்கு வா



அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!




அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!


புதுக்கவிதை



குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!



குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!

சந்தப்பா சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா – எழுதவே
விரல்கள் நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!

எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை – என
அங்குலம் அங்குலமாய்
அங்குசமாய்!

ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!

பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை உடைத்து;
விழுந்தது புதுக்கவிதை!
  
சொற்களில் புதைந்த
கவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!

பள்ளி பருவத்தில்


விடா மழை;
அம்மா சிணுங்குவார்;
அழுக்கு துணி என்னாவது;
எரிச்சலுடன் அத்தா
கடைக்கு செல்வதைப் பற்றி;
அக்காவும் நானும்
அழகாய் ஒரமாய்;
புன்னகையால் உதடுகளுக்கு
திறப்புவிழா வைப்போம்
பள்ளிக்கு விடுமுறை
நிச்சயமென்று!

தலைவர்கள் இறந்தால்
எல்லோரும் ஆளுக்கொரு
திணுசாய் கருத்துக்கள்
முளைக்கும்;
எங்களுக்கு மட்டும்
பள்ளிக்கூட நுழைவாயில்
எப்போது மூடும்
என்றே நினைப்பே கூடும்!

சின்னதாய் காயம்
இருந்தாலும்;
வன்மையாய் துடிப்போம்;
மேனிக்கு மெல்லிய சூடானாலும்
போர்வைக்குள்ளே கிடப்போம்!

மாறிய காலங்களால்
மாற்றமும் மனதில்;
இன்று!
என் பிள்ளை
அதே செய்தால்
சிரிக்க முடியாமல்
விரட்டுகிறேன்
போ.. போ.. பள்ளிக்கூடத்திற்கு!!


விடா மழை;
அம்மா சிணுங்குவார்;
அழுக்கு துணி என்னாவது;
எரிச்சலுடன் அத்தா
கடைக்கு செல்வதைப் பற்றி;
அக்காவும் நானும்
அழகாய் ஒரமாய்;
புன்னகையால் உதடுகளுக்கு
திறப்புவிழா வைப்போம்
பள்ளிக்கு விடுமுறை
நிச்சயமென்று!

தலைவர்கள் இறந்தால்
எல்லோரும் ஆளுக்கொரு
திணுசாய் கருத்துக்கள்
முளைக்கும்;
எங்களுக்கு மட்டும்
பள்ளிக்கூட நுழைவாயில்
எப்போது மூடும்
என்றே நினைப்பே கூடும்!

சின்னதாய் காயம்
இருந்தாலும்;
வன்மையாய் துடிப்போம்;
மேனிக்கு மெல்லிய சூடானாலும்
போர்வைக்குள்ளே கிடப்போம்!

மாறிய காலங்களால்
மாற்றமும் மனதில்;
இன்று!
என் பிள்ளை
அதே செய்தால்
சிரிக்க முடியாமல்
விரட்டுகிறேன்
போ.. போ.. பள்ளிக்கூடத்திற்கு!!