பொய்யென்று தெரிந்தும்


மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…



மணம் மங்கா
மணவறை ஆடை
அலமாரியில்;

இருட்டில் வாசம்பிடித்த
மருதாணி கோலம்
இன்னும் பளிச்சென்று;

நேருக்கு நேர்
என் முகம் காணா
உன் வெட்கப்பட்ட விழிகள்;

மாதத்திற்குள்ளே மணவாழ்க்கைக் கொண்டாடும்
விதி விலக்கில்லா வெளிநாட்டு மாப்பிள்ளைகளில்;
நானும் எண்ணை தேசத்திற்கு..

பொய்யென்று தெரிந்தும்;
அழுது வடியும்
உன் கண்களுக்கு
அழுதுக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்
இன்னும் கொஞ்ச நாள்தான்…


உண்ணும் ஊண்


பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

பொத்தி பொத்தி
பாதுகாத்த நிலத்தை;
கட்டாய மலடியாக்கி
சில லட்சங்களுக்கு பேரம் பேசி..
இன்று
பிளாக்குகளாகவும் பிளாட்டுகளாகவும்;
குளுகுளு அறையில் இருந்தாலும்

உண்ணும் ஊண் நிலத்தில்தானே!!  

யுத்தம் செய்வீர்


நரம்புகளில் பீறிட்டக் குருதியால்
நிரம்பிய நம் வீர வரலாறுகளைக்
கொட்டமிட்டு; திட்டமிட்டு
மாயமாக்கியது எப்படி..
பாடத்திட்டத்தில் மாயமாகியது எப்படி..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னோடுப் படித்தவரில் முக்கால்வாசி
அரசாங்க அலுவலில் இருக்க;
நான் மட்டும் ஏன் அயல்நாட்டில் உழைக்க..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னை அடித்தவன் சிரிக்க;
எதிர்காலம் தரித்திரமாய்..
அலறிய என்னை மட்டும் ஏன் காவல் பிடிக்க;
அறிந்துகொள்ள யுத்தம் செய்வீர்!

வெடித்தகுண்டின் சப்தங்கள்
ஒடுங்குவதற்கு முன்னே
ஊடகத்தின் தர்மம் அலை அலையாய்
“இஸ்லாமியப் பயங்கரவாதம்”;
உள்நோக்கம்
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது
வரலாறு அறியா சமூகம்;
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்;
அரிவாள்களால் அல்ல அறிவால்!!!


”சுதந்திர தின வாழ்த்துக்கள்”

நரம்புகளில் பீறிட்டக் குருதியால்
நிரம்பிய நம் வீர வரலாறுகளைக்
கொட்டமிட்டு; திட்டமிட்டு
மாயமாக்கியது எப்படி..
பாடத்திட்டத்தில் மாயமாகியது எப்படி..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னோடுப் படித்தவரில் முக்கால்வாசி
அரசாங்க அலுவலில் இருக்க;
நான் மட்டும் ஏன் அயல்நாட்டில் உழைக்க..
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

என்னை அடித்தவன் சிரிக்க;
எதிர்காலம் தரித்திரமாய்..
அலறிய என்னை மட்டும் ஏன் காவல் பிடிக்க;
அறிந்துகொள்ள யுத்தம் செய்வீர்!

வெடித்தகுண்டின் சப்தங்கள்
ஒடுங்குவதற்கு முன்னே
ஊடகத்தின் தர்மம் அலை அலையாய்
“இஸ்லாமியப் பயங்கரவாதம்”;
உள்நோக்கம்
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்!

வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது
வரலாறு அறியா சமூகம்;
அறிந்துக்கொள்ள யுத்தம் செய்வீர்;
அரிவாள்களால் அல்ல அறிவால்!!!


”சுதந்திர தின வாழ்த்துக்கள்”

தேவையில்லை தலைப்பு


ஓடி விளையாடும்
மழலைகளுக்கு மத்தியில்
மலர்கொத்தாய் நீ;
அம்மாணையோ; ஆபியமோ
ஆட முடியாது எல்லோரையும் போல்!

உயிருள்ள நாங்களோ
உயிரே உனக்காக உருக;
உயிரற்றப் பொருட்களிலே உன் கவனம்!

எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுவிட மாட்டோம் உனை;
அறிந்தே வைத்திருக்கிறோம்
எங்களுக்கான சுவர்கத்தின் சாவி நீயென்பதை!!!

ஓடி விளையாடும்
மழலைகளுக்கு மத்தியில்
மலர்கொத்தாய் நீ;
அம்மாணையோ; ஆபியமோ
ஆட முடியாது எல்லோரையும் போல்!

உயிருள்ள நாங்களோ
உயிரே உனக்காக உருக;
உயிரற்றப் பொருட்களிலே உன் கவனம்!

எக்காரணத்தைக் கொண்டும்
விட்டுவிட மாட்டோம் உனை;
அறிந்தே வைத்திருக்கிறோம்
எங்களுக்கான சுவர்கத்தின் சாவி நீயென்பதை!!!

பெருமையான நாள் பெருநாள்


நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!

நான் அனுப்பிய பணத்தில்
நீ எடுத்து அனுப்பும் பெருநாள் ஆடை;
உடலோடுச் சேர்ந்து உள்ளமும் பளிரென்று;
வெளிநாட்டு பணத்தின்
வியர்வை நாற்றத்தை
மாற்றி மணம் வீசுது..

அடுத்த முறையாவது உன்னுடன்
இருக்க மனம் ஏங்குது!!

நடிக்க தெரியா பசி


கிள்ளியெடுக்கும் பசியை வயிற்றிலும்;
துள்ளிக் குதிக்கவேண்டிய என்
பிள்ளையைக் கரத்திலும்;
விழிகளுக்கு நீரினால் குடையிட்டு;
பொங்கிவரும் அழுகையிற்கு அணையிட்டு;
ஒடிந்துப்போனக் குரலுடன் கேட்கிறேன்…
பசிக்குது…

என் பிள்ளைக்கும்…எனக்கும்!!

கிள்ளியெடுக்கும் பசியை வயிற்றிலும்;
துள்ளிக் குதிக்கவேண்டிய என்
பிள்ளையைக் கரத்திலும்;
விழிகளுக்கு நீரினால் குடையிட்டு;
பொங்கிவரும் அழுகையிற்கு அணையிட்டு;
ஒடிந்துப்போனக் குரலுடன் கேட்கிறேன்…
பசிக்குது…

என் பிள்ளைக்கும்…எனக்கும்!!

கட்டிப்பிடித்து ஒர் முத்தம்


மீசையும் தாடியும்
துளிர்விட்டதுமே தூரமாய் நீ!
தோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்
என் தோலுக்குள்ளே ஒளித்திருக்கிறேன்
இனம்புரியா பாசம்…

கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்
என நான் பல தருணம் ஏக்கத்துடன்!
நான் மூச்சுவிடும்போதே
ஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;
பின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே
புலம்புவாய் நீயும் எனைப்போல…
தகப்பனுக்குத் தந்திருக்கலாம்
ஒரு முத்தமாவது என!!

மீசையும் தாடியும்
துளிர்விட்டதுமே தூரமாய் நீ!
தோளுக்கு மேல் நீ வளர்ந்ததால்
என் தோலுக்குள்ளே ஒளித்திருக்கிறேன்
இனம்புரியா பாசம்…

கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தருவாய்
என நான் பல தருணம் ஏக்கத்துடன்!
நான் மூச்சுவிடும்போதே
ஒரு முறை உன் மூச்சுக்காற்றை என்மேல் வீசு;
பின் – நான் மூர்ச்சையாகிப்போனப் பின்னே
புலம்புவாய் நீயும் எனைப்போல…
தகப்பனுக்குத் தந்திருக்கலாம்
ஒரு முத்தமாவது என!!

இராஜபோக குளியல்