தாய் பாசம்


கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

ஊருக்குப் போகும் போது


விண்ணப்பித்த என்
விடுப்புக் கடிதம்
அனுமதி என்ற
வண்ணத்தால் பளப்பளக்க;

மூச்சு முட்டிச் சேமித்தத்
திர்ஹம்சை வடிக்கட்டி;
மூட்டை முடிச்சிக் கட்ட
ஆயத்தமாகும் போகும் போது;
அலறும் கைப்பேசி;

என்னைப் போல்
எண்ணை நாட்டில்;
பளப்பளப்பு இழந்த
ஊர் நண்பர்கள்
அக்கறையாய் அக்கரைக்குச்
செல்வதைக் கேட்கும் போது
உள்ளம் குதூகலிக்கும்!

நண்பர்கள் கூட்டமொன்று;
சிரித்துக் கொண்டேச்
சின்னச் சாமான் என்று;
என் மூட்டையோடு
மூலையில் போடென்று;
இளித்துக் கொண்டேக்
கரத்தில் திணித்துவிட்டுச் செல்லும்!

முக்கும் மூட்டையுடன்;
ஏறிய எடையுடன்;
விமான நிலையத்திற்குச் செல்ல;
கூடிய எடைக்குப்
பிரசவம் பார்க்கச் சொல்லி
நிலைய அதிகாரி எனக்கு
கட்டமிடுவார்!

கட்டு அவிழ்க்கக்
கவலைக்கொண்டு;
கப்பம் கட்டுவேன்;
இனி யாரிடம் பொருள்
வாங்கலாம் என்று
முடிவுக்கட்டுவேன்!

விண்ணப்பித்த என்
விடுப்புக் கடிதம்
அனுமதி என்ற
வண்ணத்தால் பளப்பளக்க;

மூச்சு முட்டிச் சேமித்தத்
திர்ஹம்சை வடிக்கட்டி;
மூட்டை முடிச்சிக் கட்ட
ஆயத்தமாகும் போகும் போது;
அலறும் கைப்பேசி;

என்னைப் போல்
எண்ணை நாட்டில்;
பளப்பளப்பு இழந்த
ஊர் நண்பர்கள்
அக்கறையாய் அக்கரைக்குச்
செல்வதைக் கேட்கும் போது
உள்ளம் குதூகலிக்கும்!

நண்பர்கள் கூட்டமொன்று;
சிரித்துக் கொண்டேச்
சின்னச் சாமான் என்று;
என் மூட்டையோடு
மூலையில் போடென்று;
இளித்துக் கொண்டேக்
கரத்தில் திணித்துவிட்டுச் செல்லும்!

முக்கும் மூட்டையுடன்;
ஏறிய எடையுடன்;
விமான நிலையத்திற்குச் செல்ல;
கூடிய எடைக்குப்
பிரசவம் பார்க்கச் சொல்லி
நிலைய அதிகாரி எனக்கு
கட்டமிடுவார்!

கட்டு அவிழ்க்கக்
கவலைக்கொண்டு;
கப்பம் கட்டுவேன்;
இனி யாரிடம் பொருள்
வாங்கலாம் என்று
முடிவுக்கட்டுவேன்!

இரவுப் பணி..



பகல் நேரம்
படுக்கையில் போக;
பசியெடுத்துப்
புரண்டுப்படுத்து;
எழுவதா புரள்வதா என
அழுதுப் புலம்பும்
கண்களுக்கு ஆறுதல் சொல்லி;
நமச்சல் கொடுக்கும்  தூக்கத்தோடு;
எரிச்சல் கொடுக்கும் இமையையும்
பிடித்துக் கொண்டு எழுவேன்!

எல்லோரும்
பணி முடிந்து;
தங்கும் அறையிற்குப்
படரும் நேரம்;
எழுந்துச் செல்வேன்
குளிக்க அழுதுச் செல்வேன்
இரவுப் பணியிற்காக!

விடியும் நேரம்
விழிகள் ஒளிந்துக் கொள்ள;
இரவு நேரம் பணியில்
உறவுக் கொள்ள;
சிரித்துப் பேச ஆளில்லாமல்;
சிந்திக்க நேரமில்லாமல்;
ஓய்வுக்குப் பித்துப் பிடித்து;
சத்துக்கள்  சல்லடையாய்!


பகல் நேரம்
படுக்கையில் போக;
பசியெடுத்துப்
புரண்டுப்படுத்து;
எழுவதா புரள்வதா என
அழுதுப் புலம்பும்
கண்களுக்கு ஆறுதல் சொல்லி;
நமச்சல் கொடுக்கும்  தூக்கத்தோடு;
எரிச்சல் கொடுக்கும் இமையையும்
பிடித்துக் கொண்டு எழுவேன்!

எல்லோரும்
பணி முடிந்து;
தங்கும் அறையிற்குப்
படரும் நேரம்;
எழுந்துச் செல்வேன்
குளிக்க அழுதுச் செல்வேன்
இரவுப் பணியிற்காக!

விடியும் நேரம்
விழிகள் ஒளிந்துக் கொள்ள;
இரவு நேரம் பணியில்
உறவுக் கொள்ள;
சிரித்துப் பேச ஆளில்லாமல்;
சிந்திக்க நேரமில்லாமல்;
ஓய்வுக்குப் பித்துப் பிடித்து;
சத்துக்கள்  சல்லடையாய்!

ஒருபக்க நியாயம்..


உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும் 
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!

உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும் 
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!

குருவிக் கூடு..


அழுக்கு ஆடையும்
வழுக்கும் குளியலறையும்
இனிமையாய் வரவேற்க;

அட்டவணைப்படி
அடிப்படிகள்
புகையைக் கக்க;

மாலையானதும்
மடிக்கணினிகள்
எங்கள் மடியைக்
கனக்கச் செய்ய;

இரவினில்
சதுரப்பலகை சப்தமிட;
சப்தமில்லாமல்
சொப்பனம்
சமாதானம் வீச;

மனம் மட்டும் ஏங்கும்;
தூங்கா அணுக்கள்
அலைப்பாயும்;
வடு இல்லா வலிகளால்
ரணம் பாயும்;
தினம் விழிக் காயும்!

நாடுவிட்டு;நாடு வந்து;
கூட்டுக்குள் குருவியாய்
குளிர்காயும் பிரம்மச்சாரிகள்;
மணம் முடித்திருந்தாலும்!  

அழுக்கு ஆடையும்
வழுக்கும் குளியலறையும்
இனிமையாய் வரவேற்க;

அட்டவணைப்படி
அடிப்படிகள்
புகையைக் கக்க;

மாலையானதும்
மடிக்கணினிகள்
எங்கள் மடியைக்
கனக்கச் செய்ய;

இரவினில்
சதுரப்பலகை சப்தமிட;
சப்தமில்லாமல்
சொப்பனம்
சமாதானம் வீச;

மனம் மட்டும் ஏங்கும்;
தூங்கா அணுக்கள்
அலைப்பாயும்;
வடு இல்லா வலிகளால்
ரணம் பாயும்;
தினம் விழிக் காயும்!

நாடுவிட்டு;நாடு வந்து;
கூட்டுக்குள் குருவியாய்
குளிர்காயும் பிரம்மச்சாரிகள்;
மணம் முடித்திருந்தாலும்!  

முதியோர் இல்லம்



அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!

பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!

பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!

நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!

தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும்
இணையை உன்
கரம் சேர்த்தேன் அன்று!

இன்று
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில்
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து
சேர்ந்ததா?


அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!

பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!

பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!

நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!

தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும்
இணையை உன்
கரம் சேர்த்தேன் அன்று!

இன்று
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில்
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து
சேர்ந்ததா?

ஊனமான நிலம்..



மணக்கும்
மருந்துகளால் ரணமாகி
ஊமையாய்;
ஊனமான நிலம்;

நாவு வறண்டு;
உதடுகள் வெடித்து;
நீர் இல்லாமல்
நிலத்திற்குக் கருக்கலைப்பு!

அடிக்கல் நட்டு
அடிமாட்டு விலையிலிருந்து;
அசுர விலைவரை;
விவசாயத்திற்கு
குழித்தோண்ட;
குழித்தோண்டி வீடுக் கட்ட;
கிரயமாகும் நிலம்!



மணக்கும்
மருந்துகளால் ரணமாகி
ஊமையாய்;
ஊனமான நிலம்;

நாவு வறண்டு;
உதடுகள் வெடித்து;
நீர் இல்லாமல்
நிலத்திற்குக் கருக்கலைப்பு!

அடிக்கல் நட்டு
அடிமாட்டு விலையிலிருந்து;
அசுர விலைவரை;
விவசாயத்திற்கு
குழித்தோண்ட;
குழித்தோண்டி வீடுக் கட்ட;
கிரயமாகும் நிலம்!

வருங்கால இந்தியா..



அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!

ஒலிப்பெருக்கியின்
ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!

அலறும் சப்தத்துடன்
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!

ஒலிப் புலனை
ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!

அம்மாவிடம் கொடு என;
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!

முடிந்தது என் வேலை என்று;
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!

மீண்டும் திருப்பினாள் எனை;
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!

வாசலுக்கு விரையும்
வருங்கால இந்தியா
நான்!



அன்னையை ஒட்டி
நின்ற என்னை
எட்டி நிற்கச் சொல்லி;
வாசலுக்கு வருகைப்
போடச் சொன்னாள்!

ஒலிப்பெருக்கியின்
ஓசையைக் கேட்டதும்;
ஓடி வா;
எங்கிருந்தாலும் என்னைத்
தேடிவா என்றாள்!

அலறும் சப்தத்துடன்
உயரும் குரலுடன்;
ஓர் வண்டி
என் தெருவை மிதிக்க;
ஓடிச் சென்றேன்;
அன்னையைக் காண!

ஒலிப் புலனை
ஓங்கி அடித்து;
ஒலிப்பெருக்கியோ
ஒய்யாரமாய் என்
வீட்டில் நிற்க;
வாக்குக் கேட்டு
வரிசையாய் ஓர் கூட்டம்!

அம்மாவிடம் கொடு என;
அன்பாய் என் தலைக் கோதி;
மறக்காமல் நம் சின்னம்;
என்று பணத்தைக்
கரத்தில் திணித்து;
பக்கத்து வீட்டுப்
படியேறியது
வெள்ளை ஆடைக் கூட்டம்!

முடிந்தது என் வேலை என்று;
அம்மாவின் முந்தாணையில்
முறுக்கிக் கொள்ள;
மெல்ல நகர்ந்தேன்;
அடுப்படிக்கு!

மீண்டும் திருப்பினாள் எனை;
அடுத்த வண்டி வரும் போதும்
ஓடி வா;செல்லம் என்று!

வாசலுக்கு விரையும்
வருங்கால இந்தியா
நான்!

அந்தோ பணத்திற்கு


வாய் விட்டு அழ
வயது தடுக்க;
விழிகள் நீரில்
நீச்சலடித்து
நீந்திச் செல்ல;
கைப்பேசிக் கனமாகி;
இதயம் ரணமாக;
என் குழந்தையின்
முனகல் என் மனதை
முட்டித்தள்ளும் போது!

அருகில் இல்லாமல்
போன இல்லாள்;
மென்மையானக் குரலில்
வன்மையான
வார்த்தைகளால்;
வழி மொழிவாள்;
வருவது எப்போது!
பிதுங்கி வரும்;
கண்ணீரைக் கண்களுக்கு;
அர்ப்பணம் செய்தேன்;
அந்தோ!பணத்திற்கு!

வாய் விட்டு அழ
வயது தடுக்க;
விழிகள் நீரில்
நீச்சலடித்து
நீந்திச் செல்ல;
கைப்பேசிக் கனமாகி;
இதயம் ரணமாக;
என் குழந்தையின்
முனகல் என் மனதை
முட்டித்தள்ளும் போது!

அருகில் இல்லாமல்
போன இல்லாள்;
மென்மையானக் குரலில்
வன்மையான
வார்த்தைகளால்;
வழி மொழிவாள்;
வருவது எப்போது!
பிதுங்கி வரும்;
கண்ணீரைக் கண்களுக்கு;
அர்ப்பணம் செய்தேன்;
அந்தோ!பணத்திற்கு!