எழுதுகோல்


கிறுக்கிய என் எழுத்துக்களைக்
குறுக்கெழுத்து என நீ
கொஞ்சிய நாட்கள்
உறைந்துப்போய்;

மை ஊற்றி;
பக்கங்களையும் திண்ணும்
எழுதுகோல் உறங்கிப்போனதால்
மை  உறைந்துப்போய்;

சிந்திக்கும் திறனும்;
கணிணிக்கும் கைப்பேசிக்கும்
கடன் கொடுத்து;

மீண்டும் மீண்டும்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொள்ள;
அழகாய் நீ ஒளித்துக்கொள்ளக்
காலமானக் காலங்களில்
காலாவதியான மை;
மயக்கத்தில் பேனா!

கிறுக்கிய என் எழுத்துக்களைக்
குறுக்கெழுத்து என நீ
கொஞ்சிய நாட்கள்
உறைந்துப்போய்;

மை ஊற்றி;
பக்கங்களையும் திண்ணும்
எழுதுகோல் உறங்கிப்போனதால்
மை  உறைந்துப்போய்;

சிந்திக்கும் திறனும்;
கணிணிக்கும் கைப்பேசிக்கும்
கடன் கொடுத்து;

மீண்டும் மீண்டும்
பார்த்துப் பார்த்துச்
சிரித்துக்கொள்ள;
அழகாய் நீ ஒளித்துக்கொள்ளக்
காலமானக் காலங்களில்
காலாவதியான மை;
மயக்கத்தில் பேனா!

அம்மா



ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!


ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!

கைத்தொழில்


வளரும் முதுகெலும்பை
வளைத்து;
முளைக்கும் வயதிலேப்
பாடச்சுமைக் கொழுத்து;
தள்ளாடும் பிஞ்சுகள்
வருங்காலக் குடிமகன்!

ஆடி அசைந்து;
அலுத்துப் போனதால்;
அன்னையின் உதவிக்கு
உதடுகள் கொஞ்சும்;
வீட்டுப்பாடங்கள்
விழிகளைக் கெஞ்சும்!

பாடத் திட்டத்தோடு
பிள்ளைகளின்
தொழில் திட்டத்தையும்
அரங்கேற்றும்
கல்வித் தொழில்;
எதிர்கால இந்தியாவிற்குக்
கற்றுக்கொடுக்கும் புதுக்
கைத்தொழில்!

வளரும் முதுகெலும்பை
வளைத்து;
முளைக்கும் வயதிலேப்
பாடச்சுமைக் கொழுத்து;
தள்ளாடும் பிஞ்சுகள்
வருங்காலக் குடிமகன்!

ஆடி அசைந்து;
அலுத்துப் போனதால்;
அன்னையின் உதவிக்கு
உதடுகள் கொஞ்சும்;
வீட்டுப்பாடங்கள்
விழிகளைக் கெஞ்சும்!

பாடத் திட்டத்தோடு
பிள்ளைகளின்
தொழில் திட்டத்தையும்
அரங்கேற்றும்
கல்வித் தொழில்;
எதிர்கால இந்தியாவிற்குக்
கற்றுக்கொடுக்கும் புதுக்
கைத்தொழில்!

வறுமைக் கோடு



ஏழ்மையின் கோட்டினைத்
தொட்டதால்
வறுமைக் கோட்டினை
முத்தமிடும்
அடித்தட்டு வர்க்கம்;
ஒருவேளைச்
சாப்பாட்டிற்கு ஏக்கம்!

அடிவயிறு அலறி;
குடல்கள்
கோபித்துக்கொண்டு;
மூலையில் சுருங்கி;
பசியில்;
மூளையும் சுருங்கி!

பட்டினியில் அழும்
குழந்தைக்கு;
வருடும் விரல்
ஆறுதலாய்;
உணவுத்தேடித்
தெருத்தெருவாய்!


ஏழ்மையின் கோட்டினைத்
தொட்டதால்
வறுமைக் கோட்டினை
முத்தமிடும்
அடித்தட்டு வர்க்கம்;
ஒருவேளைச்
சாப்பாட்டிற்கு ஏக்கம்!

அடிவயிறு அலறி;
குடல்கள்
கோபித்துக்கொண்டு;
மூலையில் சுருங்கி;
பசியில்;
மூளையும் சுருங்கி!

பட்டினியில் அழும்
குழந்தைக்கு;
வருடும் விரல்
ஆறுதலாய்;
உணவுத்தேடித்
தெருத்தெருவாய்!

புதுப்பெண் என்னை


அமைதியான மனதில்
திருமணக் கல்லை
எறிந்துவிட்டு;
சுழல்கள் சுருங்கும் முன்னே;
நிழலாய் நீ என் அருகில்!

பரப்பரப்பாய் முடிந்த
மணத்திலும்;
மனம் முழுவதும்
மணம் வீச;
உன் மனம்
முழுவதும் நான் வீச!

பூரிப்பும்
புன்னகையும்
புதுப்பெண் என்னை;
புடைத்து எடுக்க;
வெற்றிப்பெற்றப்
பெருமிதத்தில்
என் பெற்றோர்!

மென்மையான
நாட்களைக் கொய்ய;
நீ கொண்டுவந்த உன்
பயணச் சீட்டு;
ஒட்டுப் போட்ட என்
சந்தோஷத்தில் சல்லடையாய்
ஓட்டையப் போட!

நிலைக் குலைந்து
நிலை வாசலில் நின்று;
விழிக் கரைய – என் முக
ஒளிக் குறைய;
உதடுகள் இரண்டும்
பிணங்கிக் கொண்டு;
கரம் என்
கண்ணீரைத் துடைக்க;
மனம் மட்டும் ஏங்கும்;
நீ போவது பொய்யாக
இருக்கக் கூடாதா என்று!

அமைதியான மனதில்
திருமணக் கல்லை
எறிந்துவிட்டு;
சுழல்கள் சுருங்கும் முன்னே;
நிழலாய் நீ என் அருகில்!

பரப்பரப்பாய் முடிந்த
மணத்திலும்;
மனம் முழுவதும்
மணம் வீச;
உன் மனம்
முழுவதும் நான் வீச!

பூரிப்பும்
புன்னகையும்
புதுப்பெண் என்னை;
புடைத்து எடுக்க;
வெற்றிப்பெற்றப்
பெருமிதத்தில்
என் பெற்றோர்!

மென்மையான
நாட்களைக் கொய்ய;
நீ கொண்டுவந்த உன்
பயணச் சீட்டு;
ஒட்டுப் போட்ட என்
சந்தோஷத்தில் சல்லடையாய்
ஓட்டையப் போட!

நிலைக் குலைந்து
நிலை வாசலில் நின்று;
விழிக் கரைய – என் முக
ஒளிக் குறைய;
உதடுகள் இரண்டும்
பிணங்கிக் கொண்டு;
கரம் என்
கண்ணீரைத் துடைக்க;
மனம் மட்டும் ஏங்கும்;
நீ போவது பொய்யாக
இருக்கக் கூடாதா என்று!

விட்டுக்கொடுக்கிறேன்


தட்டிக் கேட்கும்
என் துணிவும்;
சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கா என்
தொணியையும்;
வளைகுடாவில்
விட்டுக்கொடுக்கிறேன்;

மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
ஒட்டியிருக்கிறேன்;
உனக்காக என் சுபாவத்தைச்
சுருட்டி வைக்கிறேன்!

பணம் தேடிப்
பாலைவனத்தில்;
சினம் தூண்டும்
மரியாதையைச்
சரணடையைச் செய்து;
விழி முழுவதும்
நீர் கோர்த்திருக்கும்
உனக்காக விட்டுக்கொடுக்கிறேன்;
நம் பிள்ளைக்காக
விற்று நிற்கிறேன்! 


கவிதைக்கு கரு தந்தவர்:
ஃபெரோஸ்கான் - முத்துப்பேட்டை

தட்டிக் கேட்கும்
என் துணிவும்;
சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கா என்
தொணியையும்;
வளைகுடாவில்
விட்டுக்கொடுக்கிறேன்;

மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
ஒட்டியிருக்கிறேன்;
உனக்காக என் சுபாவத்தைச்
சுருட்டி வைக்கிறேன்!

பணம் தேடிப்
பாலைவனத்தில்;
சினம் தூண்டும்
மரியாதையைச்
சரணடையைச் செய்து;
விழி முழுவதும்
நீர் கோர்த்திருக்கும்
உனக்காக விட்டுக்கொடுக்கிறேன்;
நம் பிள்ளைக்காக
விற்று நிற்கிறேன்! 


கவிதைக்கு கரு தந்தவர்:
ஃபெரோஸ்கான் - முத்துப்பேட்டை

வருகிறேன் ஊருக்கு


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!



கவிதைக்குத் கரு தந்தவர்: 
நாகூர் மீரான் -ETA Ascon

இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!



கவிதைக்குத் கரு தந்தவர்: 
நாகூர் மீரான் -ETA Ascon

சுவனத்தின் சுவடிக்காக


நாவுப் பிறண்டு;
சகோதரனைக் காவு வாங்கிய
வார்த்தைக்கு வருந்திவிட்டு;
விழி நிரம்பக்
கண்ணீரோடுக் கையேந்துகிறேன்
என் இறைவா!

இமைத் திறந்து;
விழியின் மொழியால்;
விபச்சாரத்தை அணைத்த
மனம் செய்தத் தவறை;
மனம் நொந்துக் கரைகிறேன்
என் இறைவா!

விளங்கிக்கொள்ளும் மூளையை;
கலங்கக்கடிக்கும்
கடைசிக் கட்ட வேதனைக்கும்;
கதிகலங்கி நிற்கிறேன்
என் இறைவா!

மனம் குளிரும் – என்
முகம் மலரும்;
சுவனத்தின் சுவடிக்காக;
ஏங்குகிறேன்
என் இறைவா!

நாவுப் பிறண்டு;
சகோதரனைக் காவு வாங்கிய
வார்த்தைக்கு வருந்திவிட்டு;
விழி நிரம்பக்
கண்ணீரோடுக் கையேந்துகிறேன்
என் இறைவா!

இமைத் திறந்து;
விழியின் மொழியால்;
விபச்சாரத்தை அணைத்த
மனம் செய்தத் தவறை;
மனம் நொந்துக் கரைகிறேன்
என் இறைவா!

விளங்கிக்கொள்ளும் மூளையை;
கலங்கக்கடிக்கும்
கடைசிக் கட்ட வேதனைக்கும்;
கதிகலங்கி நிற்கிறேன்
என் இறைவா!

மனம் குளிரும் – என்
முகம் மலரும்;
சுவனத்தின் சுவடிக்காக;
ஏங்குகிறேன்
என் இறைவா!

நல்ல நட்பு


நட்பு கற்பு என்று
கட்டம் கட்டுவேனா;
பாதை மாறும் உன்
பாதத்தைக்
கண்டும் காணாமல்
கண்டுக் களிப்பேனா!

குத்திக்காட்டி உன்
மனதிற்குக்
கத்தியிடுவேனா!
முகம் சுளிக்கும் உன்
அகம் இருளும் போது
தடுக்காமல் இருப்பேனா!

தீமையைத்
தடுப்பதைக் கொண்டு – நீ
வெடிப்பதைக் கண்டு
பயந்து நான் ஓடுவேனா!

கஷ்டத்திற்கு மட்டும்
உன்னை
இஷ்டமாக்குவேனா;
இஷ்டப்பட்டு - நான்
சுயநலவாதியானால்
உனக்கு நல்ல
நண்பன் ஆவேனா!

நட்பு கற்பு என்று
கட்டம் கட்டுவேனா;
பாதை மாறும் உன்
பாதத்தைக்
கண்டும் காணாமல்
கண்டுக் களிப்பேனா!

குத்திக்காட்டி உன்
மனதிற்குக்
கத்தியிடுவேனா!
முகம் சுளிக்கும் உன்
அகம் இருளும் போது
தடுக்காமல் இருப்பேனா!

தீமையைத்
தடுப்பதைக் கொண்டு – நீ
வெடிப்பதைக் கண்டு
பயந்து நான் ஓடுவேனா!

கஷ்டத்திற்கு மட்டும்
உன்னை
இஷ்டமாக்குவேனா;
இஷ்டப்பட்டு - நான்
சுயநலவாதியானால்
உனக்கு நல்ல
நண்பன் ஆவேனா!

ஒருதலைக் காதல்


அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!

அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!