உணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!
ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!
உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;
மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!
ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!
ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!