நெருடிக்கொண்டு


மூச்சுத்திணறி
முறுக்கிக்கொண்டு;
செவியை நிரப்பும்
உன் ஒலியைக்
கேட்டதில்லை!

பாலுக்கு அழுது;
சிவக்கும் உன்
கன்னத்தை நான்
தொட்டதில்லை!

எரிச்சலில்
என் மனைவியின்
கூந்தலைக்
கொத்தும் உன்
பிஞ்சுவிரலை
முத்தமிட்டதில்லை!

அலைத்தொடர்பில்
வெகுதொலைவில்
உள்ள எனக்கு;
உன் நிழற்படம் மட்டும்!

நான் அனுப்பிய
பெயர் மட்டும் உன்னை
வருடிக்கொண்டு;
என் நெஞ்சை
நெருடிக்கொண்டு!

மூச்சுத்திணறி
முறுக்கிக்கொண்டு;
செவியை நிரப்பும்
உன் ஒலியைக்
கேட்டதில்லை!

பாலுக்கு அழுது;
சிவக்கும் உன்
கன்னத்தை நான்
தொட்டதில்லை!

எரிச்சலில்
என் மனைவியின்
கூந்தலைக்
கொத்தும் உன்
பிஞ்சுவிரலை
முத்தமிட்டதில்லை!

அலைத்தொடர்பில்
வெகுதொலைவில்
உள்ள எனக்கு;
உன் நிழற்படம் மட்டும்!

நான் அனுப்பிய
பெயர் மட்டும் உன்னை
வருடிக்கொண்டு;
என் நெஞ்சை
நெருடிக்கொண்டு!

1 comment:

  1. அன்பு சகோதரா,
    எப்போது தீரும் நம் ஏக்கங்கள்.......
    எவ்வளவு வலி நிறைந்தது உங்கள் வரிகள்

    ReplyDelete