எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்

 

இதயத்தை  இரும்பாக்கிக் கொண்டு
எல்லோருக்கும் சொன்னேன்,
ச்சீ ச்சீ என்னது;
சிறுபிள்ளையா நீ?

கனத்த மனதுடன்
கண்களில் முட்டிய  கண்ணிர்;
அனுமதி இல்லாமல் ஏன் வந்தது;
என்று என்னையே நொந்துக் கொண்டேன்!

விட்டால் வெடித்துவிடுமோ என்று
நினைக்கும் அளவிற்குத்
தொண்டைக் குழிக்குள்
அணைப் போட்டு
அடக்கி வைத்திருக்கும் என்
அன்னையின் அழுகை!

சப்தம் போடாமல்
சாரைச் சாரையாய் நீர் பாய்ச்சும்;
என் மனைவியின் விழிகள்!

சம்பாதிக்கும் கனவில்;
காலடி எடுத்து வைத்தேன்
பாலைவனத்தை நோக்கி!
எத்தனை பேருகளுடையக்
கண்ணீரை விழுங்கிக்கொண்டு
வெறுமையாய் சிரித்தது !

எத்துனை நபர்களின் முதுகெழும்பில்
இத்தனை உயரமான கட்டிடங்கள்!

தங்குவதற்குச் சென்றேன்
தங்கும் அறையை நோக்கி
ஆஹா ! என்னைப் போலவே
எத்துனை பேர் இங்கே!

கூத்தும் கும்மாளமாய்  ஒரே சிரிப்பு,
எல்லோரும் சென்றோம் படுக்கைக்கு,
என்னையும் அறியாமல்;
சுற்றிச் சூழ்ந்துக்கொண்ட
ஒட்டு மொத்த அழுத்தமும் ,
சற்றே சப்தத்துடன் வெளியேறியது
என் அழுகைச் சத்தம்;

உடனே வந்தது ஒரு கை;
என் தோள்களைத் தொட்டுச் சொன்னார் அவர்,
ஒரு மாதம் அப்படித்தானே இருக்கும் என்று;

நான் வெகுளியாய் கேட்டேன்;
மாதத்திற்குப் பிறகு
மறந்து விடுமா என்று ?
அவர்  சொன்னார்
இல்லை மரத்து விடும்;

போகப் போக்க் கற்றுக்கொண்டேன்;
எல்லோரையும் போல
தலையணைக்குள் கதறும்
சப்தமே இல்லாமல்!

தொலைபேசியில் ஒவ்வொரு  முறையும்
பேச்சுக்களை விட என் மனைவின்
அழுகுரல் மட்டுமே;
கனமாக விழும் என் காதுகளில்!

தழு தழுத்த குரலில்
மெதுவாய் அவளிடம் சொன்னேன்,
எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என்று,
வெட்கமே இல்லாமல் இரண்டாம் வருடமாய்!
 

இதயத்தை  இரும்பாக்கிக் கொண்டு
எல்லோருக்கும் சொன்னேன்,
ச்சீ ச்சீ என்னது;
சிறுபிள்ளையா நீ?

கனத்த மனதுடன்
கண்களில் முட்டிய  கண்ணிர்;
அனுமதி இல்லாமல் ஏன் வந்தது;
என்று என்னையே நொந்துக் கொண்டேன்!

விட்டால் வெடித்துவிடுமோ என்று
நினைக்கும் அளவிற்குத்
தொண்டைக் குழிக்குள்
அணைப் போட்டு
அடக்கி வைத்திருக்கும் என்
அன்னையின் அழுகை!

சப்தம் போடாமல்
சாரைச் சாரையாய் நீர் பாய்ச்சும்;
என் மனைவியின் விழிகள்!

சம்பாதிக்கும் கனவில்;
காலடி எடுத்து வைத்தேன்
பாலைவனத்தை நோக்கி!
எத்தனை பேருகளுடையக்
கண்ணீரை விழுங்கிக்கொண்டு
வெறுமையாய் சிரித்தது !

எத்துனை நபர்களின் முதுகெழும்பில்
இத்தனை உயரமான கட்டிடங்கள்!

தங்குவதற்குச் சென்றேன்
தங்கும் அறையை நோக்கி
ஆஹா ! என்னைப் போலவே
எத்துனை பேர் இங்கே!

கூத்தும் கும்மாளமாய்  ஒரே சிரிப்பு,
எல்லோரும் சென்றோம் படுக்கைக்கு,
என்னையும் அறியாமல்;
சுற்றிச் சூழ்ந்துக்கொண்ட
ஒட்டு மொத்த அழுத்தமும் ,
சற்றே சப்தத்துடன் வெளியேறியது
என் அழுகைச் சத்தம்;

உடனே வந்தது ஒரு கை;
என் தோள்களைத் தொட்டுச் சொன்னார் அவர்,
ஒரு மாதம் அப்படித்தானே இருக்கும் என்று;

நான் வெகுளியாய் கேட்டேன்;
மாதத்திற்குப் பிறகு
மறந்து விடுமா என்று ?
அவர்  சொன்னார்
இல்லை மரத்து விடும்;

போகப் போக்க் கற்றுக்கொண்டேன்;
எல்லோரையும் போல
தலையணைக்குள் கதறும்
சப்தமே இல்லாமல்!

தொலைபேசியில் ஒவ்வொரு  முறையும்
பேச்சுக்களை விட என் மனைவின்
அழுகுரல் மட்டுமே;
கனமாக விழும் என் காதுகளில்!

தழு தழுத்த குரலில்
மெதுவாய் அவளிடம் சொன்னேன்,
எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என்று,
வெட்கமே இல்லாமல் இரண்டாம் வருடமாய்!

No comments:

Post a Comment