அடுத்த ரமலானுக்கு...

காலத்தோடு வந்துவிடு
கணவா என நீ கண்ணீர் வடித்தாலும்
கடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு!


எத்தனைமுறை பேசினாலும்
எதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;
என்றுதான் தனியுமோ நம் கொதிப்பு!


அழும் குழந்தைக்கு
அத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;
கடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே!


புத்தாடை அனுப்பி
பூரிப்பாய் நான் கேட்டாலும்;
பொல பொலவென்று கண்ணீரால்
வாயடைத்துவிடுவாய் என்னை!


கனைத்துவிட்டு
கனத்த இதயத்துடன்
காதோடு சொன்னேன்
அடுத்த ரமலானுக்கு...
பொய்யென்று தெரிந்தும்!!!
காலத்தோடு வந்துவிடு
கணவா என நீ கண்ணீர் வடித்தாலும்
கடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு!


எத்தனைமுறை பேசினாலும்
எதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;
என்றுதான் தனியுமோ நம் கொதிப்பு!


அழும் குழந்தைக்கு
அத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;
கடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே!


புத்தாடை அனுப்பி
பூரிப்பாய் நான் கேட்டாலும்;
பொல பொலவென்று கண்ணீரால்
வாயடைத்துவிடுவாய் என்னை!


கனைத்துவிட்டு
கனத்த இதயத்துடன்
காதோடு சொன்னேன்
அடுத்த ரமலானுக்கு...
பொய்யென்று தெரிந்தும்!!!

No comments:

Post a Comment