விற்றுவிட்ட இளமை...


பத்திரமாய் பதுக்கிவைத்த
உன் கடிதங்கள்;
தூங்காத விழிகளுக்குத்
தூக்கமாத்திரையாய்;
கனமான இதயத்திற்கு இதமாக;
கண்கள் குளமாக!

கதறி அழுதாலும்
காதில் விழாது;
கடல் கடந்துக்
கட்டிபிடிக்கும் உறவுகள்
கைப்பேசியில்;

ஊருக்கு வரச்சொல்லி;
கைப்பேசியை உன்
கரத்தில் அழுத்திவிட்டு
ஒடிவிடும் நம் பிள்ளை;
ஓடாய் தேயும்
என்னை விட;
ஓடிவிளையாடதான்
அவனுக்குப் பிடிக்கும்!

கொண்டு வந்த இளமையை
விற்றுவிட்டு ;
பாலையில் கொன்றுவிட்டு;
நரைத்த ரோமங்கள்;
நகைத்து நிற்க;
ஒதுங்கி நின்ற நீயும்
சிரித்து நிற்கிறாய்!

வழியும் கண்ணீர்
முகச்சுருக்கத்தில்
வழிந்தோட;
உதடுகள் இரண்டும்
ஒதுங்கிக் கொண்டு;
பற்களுக்கு வழிக்கொடுக்க;
மனதிற்கு வலிக்கொடுக்க!

பத்திரமாய் பதுக்கிவைத்த
உன் கடிதங்கள்;
தூங்காத விழிகளுக்குத்
தூக்கமாத்திரையாய்;
கனமான இதயத்திற்கு இதமாக;
கண்கள் குளமாக!

கதறி அழுதாலும்
காதில் விழாது;
கடல் கடந்துக்
கட்டிபிடிக்கும் உறவுகள்
கைப்பேசியில்;

ஊருக்கு வரச்சொல்லி;
கைப்பேசியை உன்
கரத்தில் அழுத்திவிட்டு
ஒடிவிடும் நம் பிள்ளை;
ஓடாய் தேயும்
என்னை விட;
ஓடிவிளையாடதான்
அவனுக்குப் பிடிக்கும்!

கொண்டு வந்த இளமையை
விற்றுவிட்டு ;
பாலையில் கொன்றுவிட்டு;
நரைத்த ரோமங்கள்;
நகைத்து நிற்க;
ஒதுங்கி நின்ற நீயும்
சிரித்து நிற்கிறாய்!

வழியும் கண்ணீர்
முகச்சுருக்கத்தில்
வழிந்தோட;
உதடுகள் இரண்டும்
ஒதுங்கிக் கொண்டு;
பற்களுக்கு வழிக்கொடுக்க;
மனதிற்கு வலிக்கொடுக்க!

1 comment:

  1. உண்மை. தான் வெளி நாட்டு வேலை வாய்பை பெற்று இழந்தைவைகள் ஏராளம்.
    தனிமையில் ஒரு தந்தையின் வலி. தெரிகிறது.

    ReplyDelete