தெரியாதப் பதிலால்;
விழிகள் நடனமாட;
உயராத ஒலியால்
மெளனமாய் நிற்க;
முகம் சிவக்கும்
எதிர் இருப்பவருக்கு!
ஒத்துக்கொண்டக்
காரியத்திற்கு;
உதடுகள் இரண்டும்
உரிந்து நிற்க;
மெளனமான மொழியால்;
முகம் மலறும்;
எதிர் இருப்பவருக்கு!
பொங்கி வரும்
சினத்திற்கு;
முட்டுக்கட்டையாய்
முழுங்கி நிற்கும்
வார்த்தைக்கு;
மெளனமாய் இருந்து
மூக்கை உடைப்போம்
எதிர் இருப்பவருக்கு!
தொண்டையில்
சிக்கியக் காற்றும்;
எழாத நாவும்;
ஒலிக்குச் சரணடைந்து
மெளனம் என்றப் பாஷையாக!
பேசுகின்ற இடத்தில்
மொழியால் பதில் அளிப்போம்;
தேவையில்லா இடத்தில்
மெளனமே பாஷையாக்குவோம்!
உரத்த சிந்தனை.ஆம் தேவையற்ற இடங்களில்
ReplyDeleteமௌனமே சிறந்த மொழி
தொடர வாழ்த்துக்கள்.
யாசர். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html
ReplyDeleteசில நேரங்களில் மௌனங்களே ஆயிரம் கதைகள் சொல்வதுண்டு
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் Mums.
ReplyDelete