போர்த்தியிருக்கும்
ஆடையைக் கண்டு;
புருவம் சுளிக்கும்;
இடையில் தெரியும்
இடையைக் கண்டு;
இமைச் சிமிட்டும்!
சேலையை விலக்கும்
காற்றைக் கண்டு;
உதடுகள் போகும்;
செவியின் பக்கம்!
எச்சம் கொண்ட
விழிகள் இரண்டும்;
வலை வீசும்
மகளிர் கண்டு!
அக்காள் தங்கைக்குச்
சிறையாய் இருந்து;
அன்னைக்கு அரணாய் இருந்து;
மனைவிற்கு உறையாய் இருந்து;
அடுத்தப் பெண்டிற்கு மட்டும்
அவலாசைக் கொள்ளும்
ஆண் மகன்!
Tweet
No comments:
Post a Comment