மருதாணி..


நிறம் மாறா
வண்ணமும்;
நிலைக் குலைந்த என்
எண்ணமும்;
மணம் வீசும்
மருதாணியாக;
மலர்ந்த என் கரத்தில்!

அலங்கரித்துக் காண்பிக்க
வேண்டிய ஆடைகள்
இன்னும் மிச்சமிருந்து
அடம்பிடிக்க;
நீ இல்லாமல் போனதால்;
என் அலமாரியில்
இடம் பிடிக்க!

புதுப்பெண் என
எல்லோரும் என்
தாடையை இடிக்க;
சொட்டுச் சொட்டாய்
விழி நீர் என் கரம் நனைக்க;
வழிந்தும் அழியா
என் மருதாணி!

நிறம் மாறா
வண்ணமும்;
நிலைக் குலைந்த என்
எண்ணமும்;
மணம் வீசும்
மருதாணியாக;
மலர்ந்த என் கரத்தில்!

அலங்கரித்துக் காண்பிக்க
வேண்டிய ஆடைகள்
இன்னும் மிச்சமிருந்து
அடம்பிடிக்க;
நீ இல்லாமல் போனதால்;
என் அலமாரியில்
இடம் பிடிக்க!

புதுப்பெண் என
எல்லோரும் என்
தாடையை இடிக்க;
சொட்டுச் சொட்டாய்
விழி நீர் என் கரம் நனைக்க;
வழிந்தும் அழியா
என் மருதாணி!

No comments:

Post a Comment