திரும்பாதப் பக்கங்கள்;
முடித்துவிட எத்தனித்து
முற்றுப்புள்ளி வைத்து;
தொடர்கதையானக் 
கறுப்புச் சரித்திரங்கள்!
விளையும் கதிரை
அறுவடைச் செய்து;
மவுனமாய் அஞ்சலி
மட்டும் செலுத்திவிட்டு;
மரணித்துப்போகும் 
மனித நேயங்கள்!
பெட்டிற்குள் வைத்து
மண்ணிற்குள் புதைக்கும்
மொட்டுகள் விதைகளா
இல்லை தொடர்கதைகளா!
வாய்விட்டுக் கதறும் 
உணர்ச்சிப்பெருக்கிற்கு
வாயடைத்துப் போகும்
வரலாறுகள்!
கொன்றவன் கொடியவன்;
தடுக்காமல் குரல் கொடுக்காமல்
உலக நாடுகளின் 
மயான அமைதி அதனினும்
கொடியது!
Tweet

வலி கொண்ட சரித்திரங்கள் மனப்பதிவாய்...........நன்றி .
ReplyDelete