மூட்டை முடிச்சும்
முட்டுவலியும் 
மூச்சிப்பிடிப்புடன்
வீடு வந்து சேர்ந்தேன்
வளைகுடாவிலிருந்து
விடுதலையாகி வந்தேன்!
மணக்கும் மனைவியின்
முகமோ சுருக்கம் கண்டு;
சுறுக்கமாய் முதுமைக் கொண்டு!  
முன்னாடி நிற்கும் எனைத்தெரிய
கண்ணாடு போடும் 
திரை மறைத்த விழி!
நரைக்கொண்டு
கரைப்படிந்து; 
உழைத்தக் காசை 
செலவுச் செய்ய 
வியாதியுடன் வந்திருக்கிறேன்
வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!
இளமைக்கு வேட்டு வைத்து
கடமைக்கு ஓட்டுப் போட்டு
கடனுக்கு ஒட்டுப்போட்டு;
பாலையிலேப் பலக்காலம்!
செழிப்பான வாலிபத்தை 
மாதச் சம்பளத்திற்கு 
விற்றுவிட்டு;
நமக்கென்று துணைவேண்டி
ஓடிவரமுடியாமல் 
ஊன்றி வருகிறேன்
குச்சினை!
எட்டி உதைக்கும் 
பிள்ளை வேண்டி
ஏங்கி நிற்கும் வயதான
 வெளிநாட்டுக் கணவன்
 உள்நாட்டில் உன்னோடு!
Tweet

நரைக்கொண்டு
ReplyDeleteகரைப்படிந்து;
உழைத்தக் காசை
செலவுச் செய்ய
வியாதியுடன் வந்திருக்கிறேன்
வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!
Execellent line dear......
வெளி நாடு என்று ஓடும் இளைஞ்சர்களுக்கு ஒருபாடமாய் அமையட்டும்.
ReplyDeleteஇது விதியா ? காலத்தின் கொடுமையா?