இப்படிக்கு உன் அண்ணன்..


பெண்ணாக பிறந்திருந்தால்
பெற்றிருப்பேன்
முதிர்க்கன்னிப் பட்டம்;
ஆணாக பிறந்ததினால்
உன்னை ஆளாக்க
அயல்நாட்டில் நான்!

என் வியர்வையை
உரமாக்கி அதில்
உன்னை உருவாக்க
கடன் கனத்ததால்
கடல் கடந்து
கடமை சுமந்து
எட்டாக்கனி கல்வியை
உனக்கு வளைத்துக் கொடுக்க
வளைகுடா வந்திருக்கேறேன்!

உன் கல்லூரிக்  கனவை;
நினைவாக்கிய நெகிழ்ச்சியில்
கனமானது மகிழ்ச்சியில் என் மனம்!

வட்டமிடும் வண்டுகள்
வாலிபத்தை நோக்கி
படையெடுக்கும் உன்னைச்சுற்றி
பல்லாங்குழி விளையாட!

மயங்கிவிடும் இளமையில்
கிறங்கி விடாதே பர்தாவை
கழட்டிவிடாதே!

மரணமே வந்தாலும்
கர்ணம் போடாதே ;
மார்க்கத்தில் புது
வர்ணம் தீட்டாதே!

குழந்தையல்ல உனக்கு
கதைச் சொல்லி வளர்க்க;
ஓடிப்போகும் குமரிகளின்
கதைகேட்டு கண்ணீர் வடிக்கும்
அண்ணன்கள் உண்டு ஏராளம் இங்கே!

சந்தேகமா என்று
சாட்டிவிடாதே என் மீதுக்
குற்றத்தை;
தரையில்கிடக்கும் தேனை
தடவிப்பார்த்து ருசிச்சொல்லும்
விஷமுள்ள வயது!

இரத்த நாளங்களில்
ஓடிக்கொண்டிருக்கும் ஷைத்தானை
வெல்வதற்கு பிடித்துகொள் ஈமானை!

இப்படிக்கு உன் அண்ணன்!

பெண்ணாக பிறந்திருந்தால்
பெற்றிருப்பேன்
முதிர்க்கன்னிப் பட்டம்;
ஆணாக பிறந்ததினால்
உன்னை ஆளாக்க
அயல்நாட்டில் நான்!

என் வியர்வையை
உரமாக்கி அதில்
உன்னை உருவாக்க
கடன் கனத்ததால்
கடல் கடந்து
கடமை சுமந்து
எட்டாக்கனி கல்வியை
உனக்கு வளைத்துக் கொடுக்க
வளைகுடா வந்திருக்கேறேன்!

உன் கல்லூரிக்  கனவை;
நினைவாக்கிய நெகிழ்ச்சியில்
கனமானது மகிழ்ச்சியில் என் மனம்!

வட்டமிடும் வண்டுகள்
வாலிபத்தை நோக்கி
படையெடுக்கும் உன்னைச்சுற்றி
பல்லாங்குழி விளையாட!

மயங்கிவிடும் இளமையில்
கிறங்கி விடாதே பர்தாவை
கழட்டிவிடாதே!

மரணமே வந்தாலும்
கர்ணம் போடாதே ;
மார்க்கத்தில் புது
வர்ணம் தீட்டாதே!

குழந்தையல்ல உனக்கு
கதைச் சொல்லி வளர்க்க;
ஓடிப்போகும் குமரிகளின்
கதைகேட்டு கண்ணீர் வடிக்கும்
அண்ணன்கள் உண்டு ஏராளம் இங்கே!

சந்தேகமா என்று
சாட்டிவிடாதே என் மீதுக்
குற்றத்தை;
தரையில்கிடக்கும் தேனை
தடவிப்பார்த்து ருசிச்சொல்லும்
விஷமுள்ள வயது!

இரத்த நாளங்களில்
ஓடிக்கொண்டிருக்கும் ஷைத்தானை
வெல்வதற்கு பிடித்துகொள் ஈமானை!

இப்படிக்கு உன் அண்ணன்!

6 comments:

  1. //குழந்தையல்ல உனக்கு
    கதைச் சொல்லி வளர்க்க;
    ஓடிப்போகும் குமரிகளின்
    கதைகேட்டு கண்ணீர் வடிக்கும்
    அண்ணன்கள் உண்டு ஏராளம் இங்கே!//

    arumai . vaalththukkal

    ReplyDelete
  2. மிகவும் அழகாய். அறிவுரை .........பாசமுள்ள் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இந்த சூழ்நிலையில் வாழும் அனைத்து அண்ணன்களின் மனதில் ஓடும் நிதர்சனத்தை கவிதையில் வடித்த சகோ க்கு நன்றிகள் பல..

    ReplyDelete
  4. Mums க்கும் நன்றி

    ReplyDelete