இன்னொருக் குழந்தை ...




சிரித்துப்பேசும் நானோ சிலநேரம்
சினந்துக்கொள்வேன் உன்னைக்
கடிந்துக்கொள்வேன்!

இல்லாத துன்பத்தை
இழுத்துப் போர்த்திக்கொண்டேன்;
இல்லாள் உனை நான் சொல்லாலே
குத்தினேனோ!

பிறந்தவீட்டை விடுத்து என்னிடம்
பறந்து வந்த சொந்தமாய் நீ;
இனியும் உன்னை கடுகடுக்க மாட்டேன்
உன் கர்பக்காலத்தைக் கண்டப் பிறகு!

அல்லல்படும் அவதியிலும்
எனைக் கண்டு அழகாய் சிரித்தவள் நீயோ;
எல்லோரும் தூங்கினாலும்
எட்டி உதைக்கும் நம் பிள்ளையை
தொட்டுப்பார்க்க எனை எழுப்பும்
இன்னொருக் குழந்தை நீயோ!

இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
நீ பிரசவத்தில் துடித்தக் கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!

இனியொருமுறை வந்தாலும் ஈகோ
துரத்தியடிப்பேன் ச்சீ ச்சீ கோ கோ!



சிரித்துப்பேசும் நானோ சிலநேரம்
சினந்துக்கொள்வேன் உன்னைக்
கடிந்துக்கொள்வேன்!

இல்லாத துன்பத்தை
இழுத்துப் போர்த்திக்கொண்டேன்;
இல்லாள் உனை நான் சொல்லாலே
குத்தினேனோ!

பிறந்தவீட்டை விடுத்து என்னிடம்
பறந்து வந்த சொந்தமாய் நீ;
இனியும் உன்னை கடுகடுக்க மாட்டேன்
உன் கர்பக்காலத்தைக் கண்டப் பிறகு!

அல்லல்படும் அவதியிலும்
எனைக் கண்டு அழகாய் சிரித்தவள் நீயோ;
எல்லோரும் தூங்கினாலும்
எட்டி உதைக்கும் நம் பிள்ளையை
தொட்டுப்பார்க்க எனை எழுப்பும்
இன்னொருக் குழந்தை நீயோ!

இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
நீ பிரசவத்தில் துடித்தக் கதறலை நினைப்பேன்;
உடைந்துப் போகட்டும் என் சினம்
வடிந்துப் போகட்டும் என் கனல்!

இனியொருமுறை வந்தாலும் ஈகோ
துரத்தியடிப்பேன் ச்சீ ச்சீ கோ கோ!

2 comments:

  1. //இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
    நீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
    உடைந்துப் போகட்டும் என் சினம்
    வடிந்துப் போகட்டும் என் கனல்!//


    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இனி வெடிக்கும் கோபம் வந்தாலும்
    நீ பிரசவத்தில் துடித்த கதறலை நினைப்பேன்;
    உடைந்துப் போகட்டும் என் சினம்
    வடிந்துப் போகட்டும் என் கனல்!//

    ஒவ்வொரு கணவன்மார்களும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள்...

    ReplyDelete