பாவப்பட்ட காஷ்மீரிகள்..




குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!

புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது! 

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை 
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;

மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!


குழந்தைப் பருவத்தில்
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!

நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும்
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!

புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும்
அழுதது! 

எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும்
அழும் சத்தம்!

இங்கு உள்ள பள்ளிகள் மட்டும்
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!

கல்லூரிக்குச் செல்லும்
காலம் வந்தது - அடிக்கடி
காவல் துறை எங்கள்
காலரைப் பிடிக்கும்
காலாலே உதைககும்!

எதிர்த்த நண்பர்களை 
மறுநாள் பார்ப்போம்
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!

சுதந்திர நாட்டில்
சுதந்திரத்திற்க்காக
நாங்கள்;

பாதுகாப்பு அரணாய்
பாரதத்திற்கு எங்கள்
தேசம் மலைகளாக!

பாதுகாப்பே இல்லா
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக
இராணுவத்திற்கு!

அதிகாரிகள் சுட்டுப் பார்க்க
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;

மாற்றட்டும் இனிக்
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!

மறைந்துப்போன
மாயமென்ன
மனிதஉரிமைக்கு
வந்தக்கேடு என்ன!

1 comment:

  1. படிக்கும்போதே மனம் வெடிக்கிறது
    பந்தங்களின் பரிதாபநிலை கண்டும் கேட்டும்.

    அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரரே!

    என் கிறுக்கலென்னும்கவிதைகளையும் நேரம்கிடைக்கும்போது வந்துபாருங்கள்..
    நீரோடையில்

    அன்புடன் மலிக்கா.

    ReplyDelete