குழந்தைப் பருவத்தில் 
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும் 
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே 
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும் 
அழுதது!  
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும் 
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும் 
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும் 
காலம் வந்தது - அடிக்கடி 
காவல் துறை எங்கள் 
காலரைப் பிடிக்கும் 
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை  
மறுநாள் பார்ப்போம் 
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில் 
சுதந்திரத்திற்க்காக 
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய் 
பாரதத்திற்கு எங்கள் 
தேசம் மலைகளாக! 
பாதுகாப்பே இல்லா 
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக 
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க 
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக் 
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன 
மனிதஉரிமைக்கு 
வந்தக்கேடு என்ன!
குழந்தைப் பருவத்தில் 
குழப்பமாய் இருக்கும்;
குண்டுச் சத்தம் மட்டும்
ஓயாமல் கேட்கும்!
நித்திரையைக் கிழித்துக் கொண்டு
நித்தம் ஒரு கூட்டம் வரும் 
நடுநிசியில்;
கேட்டால் ஆணவமாய்
இராணுவம் என்பார்கள்!
புரியாத வார்த்தையால்
தெரிந்த பாஷையிலே 
திட்டுவார்கள்;
புரியாது எனக்கு அன்று;
புரிந்தது இன்று;
அன்னையும் அக்காளும் 
அழுதது!  
எப்போதும்
அலறும் சத்தம் - எல்லோரும் 
அழும் சத்தம்!
இங்கு உள்ள பள்ளிகள் மட்டும் 
சற்று வித்தியாசமாய்;
வேலை நேரத்தை மட்டும் அறிவிப்பார்கள்;
விடுமுறையை அல்ல!
பெரும்பாலும் விடுமுறையே!
கல்லூரிக்குச் செல்லும் 
காலம் வந்தது - அடிக்கடி 
காவல் துறை எங்கள் 
காலரைப் பிடிக்கும் 
காலாலே உதைககும்!
எதிர்த்த நண்பர்களை  
மறுநாள் பார்ப்போம் 
பத்திரிகையில்;
பயங்கரவாதி என்று!
சுதந்திர நாட்டில் 
சுதந்திரத்திற்க்காக 
நாங்கள்;
பாதுகாப்பு அரணாய் 
பாரதத்திற்கு எங்கள் 
தேசம் மலைகளாக! 
பாதுகாப்பே இல்லா 
பரதேசிகளாக நாங்கள்;
பல நேரம் பயங்கரவாதியாக 
இராணுவத்திற்கு!
அதிகாரிகள் சுட்டுப் பார்க்க 
சோதனைக்கான
சுண்டெலியாக நாங்கள்;
மாற்றட்டும் இனிக் 
காவல் துறை அல்ல
காவுத் துறை என்று!
மறைந்துப்போன
மாயமென்ன 
மனிதஉரிமைக்கு 
வந்தக்கேடு என்ன!
 
 
படிக்கும்போதே மனம் வெடிக்கிறது
ReplyDeleteபந்தங்களின் பரிதாபநிலை கண்டும் கேட்டும்.
அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரரே!
என் கிறுக்கலென்னும்கவிதைகளையும் நேரம்கிடைக்கும்போது வந்துபாருங்கள்..
நீரோடையில்
அன்புடன் மலிக்கா.