ஈரமானப் பாலை...



தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!



தினந்தோறும் நீ கேட்பது
மனந்தோறும் மாறுக்கால்
போட்டு அமர்ந்திருக்கும்!

என்ன வேண்டுமென்றுக் கேட்டாலே
முதலில் என்னைச் சொல்வாய்;
பின்புதான் என்ன வேண்டுமென்றுச் சொல்லுவாய்!

கைப்பேசியில் தொடர்பறுந்தப் போதும்
தொடரும் நம் நினைவுகள்;
வைத்தப்பின்னும் பார்த்துக்கொண்டிருப்பேன்
உன் அழைப்புக்காக காத்துக்கொண்டிருப்பேன்!

வழக்கமான கேள்விகள்தான்
உண்டாயா உறங்கினாயா;
தினமும் நீ கேட்க இனிமையாக
இருக்கும் உள்ளம் குளுமையாக இருக்கும்!

முத்துக்கள் விழுந்த உன் பேச்சை
விளங்கிக் கொண்டே மீண்டும் விளிப்பேன்
புரியாததைப்போல் மீண்டும் கேட்பதற்கு!

நம் குழந்தையின் சிரிப்பை நான் கேட்க
நீ கொடுக்கும் சப்தம்;
சிரித்துக்கொள்வேன் முதல்
குழந்தையின் முணகலைக் கேட்டு!

வெத்துப் பாலையில்
ஒற்றையாய் நான் நிற்க
வெட்கமே இல்லாமல்
வியர்த்து விடும் என் விழிகள்
நீ இல்லாமல்!

No comments:

Post a Comment