பாதியில் வந்தாலும்..


கனவென்றுத்  தெரிந்தும்
விழிகளை விலக்க மாட்டேன்;
இருக்கிறது இன்னும்
அரைமணி குளியலறைக்கு
அலுவலகத்திற்க்காக!

சண்டைப் போட்டாலும்
தொண்டையில் சிக்கும்;
உன் நினைவால்
வலையில் தடுமாறி
விழுந்தாலும் தூண்களாக
உன் நினைவலை!

அந்நிய நாட்டில்
அந்நியமாய் நான்;
அந்நியோன்மாய் இருந்த நாமோ
அகதிகளாய்;
நீ மறுவீட்டில்
நான் மறுநாட்டில்!

இந்த முறை உனக்கு
இரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை  மறந்து!

என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!

பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!

மனம் நிறைய ஆசைக் கொண்டு
மறைக்காதீர்கள் இனியும்;
கொட்டிதீர்த்துவிடுங்கள்
கொப்பளிக்கும் அன்பை!

கனவென்றுத்  தெரிந்தும்
விழிகளை விலக்க மாட்டேன்;
இருக்கிறது இன்னும்
அரைமணி குளியலறைக்கு
அலுவலகத்திற்க்காக!

சண்டைப் போட்டாலும்
தொண்டையில் சிக்கும்;
உன் நினைவால்
வலையில் தடுமாறி
விழுந்தாலும் தூண்களாக
உன் நினைவலை!

அந்நிய நாட்டில்
அந்நியமாய் நான்;
அந்நியோன்மாய் இருந்த நாமோ
அகதிகளாய்;
நீ மறுவீட்டில்
நான் மறுநாட்டில்!

இந்த முறை உனக்கு
இரண்டு வளையல்கள்;
அழகாய் சிரிப்பாய்;
விற்ற 15 சவரனை  மறந்து!

என் மனம் புரிந்து
கனம் கொடுப்பாய்;
குணம் தெரிந்து
ரணம் நீக்குவாய்!

பாதியில் வந்தாலும்
புரியாத புதிராய் உன்
பாசம்!

மனம் நிறைய ஆசைக் கொண்டு
மறைக்காதீர்கள் இனியும்;
கொட்டிதீர்த்துவிடுங்கள்
கொப்பளிக்கும் அன்பை!

1 comment:

  1. //இந்த முறை உனக்கு
    இரண்டு வளையல்கள்;
    அழகாய் சிரிப்பாய்;
    விற்ற 15 சவரனை மறந்து!

    என் மனம் புரிந்து
    கனம் கொடுப்பாய்;
    குணம் தெரிந்து
    ரணம் நீக்குவாய்!

    பாதியில் வந்தாலும்
    புரியாத புதிராய் உன்
    பாசம்!//

    இயல்பாக எளிமையான வார்த்தைகளால் மனத்தைக் கவரும் அழகிய கவிதை. படித்தவுடன் ஏனோ கொஞ்சம் கணக்கிறது இதயம்...

    ReplyDelete