மருந்தேதும் இல்லையோ ..


தனியாக நான் மட்டும்
துணையாக நீ இல்லாததால்;
கூடி எல்லோரும் இருந்தாலும்
வாடி இருக்கும் என் முகம் மட்டும்!

படிக்காமல் புதுப்பெண் பட்டம்
வாங்கிருந்தாலும் – நீ வாங்காத
பட்டத்தால் வளைகுடாவில் இப்போது!

எல்லாமே இருக்கு என்றாய்
மணமாவதற்கு முன் ;
மறைத்துவிட்டாயே நீ இருக்கமாட்டாய் என் முன்!

பழக்கமில்லா உன் உறவினரும்
என்னைச் சுற்றி இங்கே;
என்னைச் சுற்ற வேண்டிய
நீயோ எங்கே!

அழுதுக்கேட்டாலும்
அலுக்காமல் உன் பதில்
உனக்காகத்தானே என்று;

மருந்தேதும் இல்லையோ
மாற்றுவதற்கு – நீ வந்தால் மட்டுமே
முடியும் என்னை தேற்றுவதற்கு!!

தனியாக நான் மட்டும்
துணையாக நீ இல்லாததால்;
கூடி எல்லோரும் இருந்தாலும்
வாடி இருக்கும் என் முகம் மட்டும்!

படிக்காமல் புதுப்பெண் பட்டம்
வாங்கிருந்தாலும் – நீ வாங்காத
பட்டத்தால் வளைகுடாவில் இப்போது!

எல்லாமே இருக்கு என்றாய்
மணமாவதற்கு முன் ;
மறைத்துவிட்டாயே நீ இருக்கமாட்டாய் என் முன்!

பழக்கமில்லா உன் உறவினரும்
என்னைச் சுற்றி இங்கே;
என்னைச் சுற்ற வேண்டிய
நீயோ எங்கே!

அழுதுக்கேட்டாலும்
அலுக்காமல் உன் பதில்
உனக்காகத்தானே என்று;

மருந்தேதும் இல்லையோ
மாற்றுவதற்கு – நீ வந்தால் மட்டுமே
முடியும் என்னை தேற்றுவதற்கு!!

1 comment:

  1. அனைத்து வரிகளும் அழகு..

    ReplyDelete