கனமாகும் மனது..


சோர்ந்து இருக்கும் ஈமானை
தட்டி எழுப்பும் ரமலானை
விடைக்கொடுக்க கடைக்கோடியில் நிற்கின்றேன் நான்!

எப்போதாவது தொழுபவரையும் பள்ளிக்கு
எப்படியும் இழுத்து வரும்
பொன்னான மாதமாய் நீ!

வீங்கிப்போன கால்களுடன்
தூங்க மறுக்கும் என் கண்கள்;
கண்ணீர்க் கொண்டு என் பாவங்களை
கழுவிக்கொள்ள கருணையாளா
உன்னிடமே சரண்;
இருக்கின்ற இரவை
இறுக்கி அணைப்பேன் தொழுகையாலே!

அடுத்தவருடம் அடைவோமோ
அருள் நிறைந்த ரமலானை;
கண நேரம் நினைத்தாலும்
கனமாகும் மனது;
உன்னை விட்டுப் பிரிய
என் மீது தொட்டு நிற்கும்
புத்தாடையுடன் பெருநாள்!

சோர்ந்து இருக்கும் ஈமானை
தட்டி எழுப்பும் ரமலானை
விடைக்கொடுக்க கடைக்கோடியில் நிற்கின்றேன் நான்!

எப்போதாவது தொழுபவரையும் பள்ளிக்கு
எப்படியும் இழுத்து வரும்
பொன்னான மாதமாய் நீ!

வீங்கிப்போன கால்களுடன்
தூங்க மறுக்கும் என் கண்கள்;
கண்ணீர்க் கொண்டு என் பாவங்களை
கழுவிக்கொள்ள கருணையாளா
உன்னிடமே சரண்;
இருக்கின்ற இரவை
இறுக்கி அணைப்பேன் தொழுகையாலே!

அடுத்தவருடம் அடைவோமோ
அருள் நிறைந்த ரமலானை;
கண நேரம் நினைத்தாலும்
கனமாகும் மனது;
உன்னை விட்டுப் பிரிய
என் மீது தொட்டு நிற்கும்
புத்தாடையுடன் பெருநாள்!

1 comment:

  1. கடைகோடியில் நிற்கிறோம் நாம் ...

    ஈகை திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete