அன்னையின் இரகசியம்..


அழும் உன்னை
ஆறுதல் செய்ய;
ஆயிரம் முகபாவனைகள்;
தும்மினாலும் சிரிக்கிறாய்;
அழுதாலும் சிரிக்கிறாய்!

என் தூக்கத்தைக்
கெடுக்கும் உன் அழுகை;
காரணிகள் காண்பதற்குள்;
எகிறும் உன் குரலோசை!

எனக்கேப் புரியாமல்
கொஞ்சல் என;
உளறி வைப்பேன்;
மிரள வைப்பேன்;
அழும் உன்னைக் கொஞ்சம்
உருளவும் வைப்பேன்!

அலுத்துப்போன நான்;
அழைப்பேன் உன்
அன்னையை;
வாரி அணைத்து;
உன் வாயில் முத்தமிட்டுக்;
கொஞ்சும் குரலால்
உன்னைக் கொஞ்சி எடுக்க;
அழும் உன் குரலோ அடங்கிப்போக!

குடும்பச் சுமை;
என் தலையில் என்றுக்;
கனம் பிடித்து அலைந்த நான்;
உன் அழுகையிடம்
தோற்றுப்போனேன்;
அடக்கி வைத்த;
உன் அன்னையைக் கண்டு
மலைத்துப் போனேன்!

அழும் உன்னை
ஆறுதல் செய்ய;
ஆயிரம் முகபாவனைகள்;
தும்மினாலும் சிரிக்கிறாய்;
அழுதாலும் சிரிக்கிறாய்!

என் தூக்கத்தைக்
கெடுக்கும் உன் அழுகை;
காரணிகள் காண்பதற்குள்;
எகிறும் உன் குரலோசை!

எனக்கேப் புரியாமல்
கொஞ்சல் என;
உளறி வைப்பேன்;
மிரள வைப்பேன்;
அழும் உன்னைக் கொஞ்சம்
உருளவும் வைப்பேன்!

அலுத்துப்போன நான்;
அழைப்பேன் உன்
அன்னையை;
வாரி அணைத்து;
உன் வாயில் முத்தமிட்டுக்;
கொஞ்சும் குரலால்
உன்னைக் கொஞ்சி எடுக்க;
அழும் உன் குரலோ அடங்கிப்போக!

குடும்பச் சுமை;
என் தலையில் என்றுக்;
கனம் பிடித்து அலைந்த நான்;
உன் அழுகையிடம்
தோற்றுப்போனேன்;
அடக்கி வைத்த;
உன் அன்னையைக் கண்டு
மலைத்துப் போனேன்!

2 comments:

  1. அம்மா என்றால் சும்மாவா??

    ReplyDelete
  2. நிச்சயமாக இல்லை

    ReplyDelete