போர்வைக்குள் புகுந்து அழ!!



வசிக்கும் அறையினில் ஒருவர்
மாற்றி ஒருவர் சமைத்தாலும்
வரவில்லை உன் கை ருசி!!

அறையினில் களைப்புடன் வருவதால்
எரிச்சலுடன் சமையல் ;
காணாமல் போகும் பாசம்!!

கொதிகலனில் இருக்கும்
என் இதயமோ;
கொதித்துக் கொண்டிருக்க;
உன்னை நினைத்துக் கொண்டிருக்க!!

மணமாகி பல வருடத்தில்
சில மாதம் மட்டுமே 
நாம் இருவராக!!

எத்தனையோ முறை
உறக்கத்தில் உளறல்
உன் பெயரினை!!

தெரிந்தாலும் நகைப்பதில்லை
என் நண்பர்கள்...
ஒவ்வொருவரின் மனதிலும்;
நாமும் உரைத்திருப்போமோ மறந்து!!

புதியதாய் கற்றுள்ளேன்
போர்வைக்குள் புகுந்து அழ!!
கசங்கிய இதயமும்
கசக்கிய கண்ணீருடன் ;
தண்ணீருக்காக எழுந்தேன்;
அத்துனை நண்பர்களின்
முகமும் போர்வைக்குள்;

குலுங்கிய போர்வைக் கண்டு
எண்ணிக்கொள்வேன்  நான்,
அவர்கள் இத்யம் மட்டும் என்ன
இரும்பினாலா உள்ளது!!!


வசிக்கும் அறையினில் ஒருவர்
மாற்றி ஒருவர் சமைத்தாலும்
வரவில்லை உன் கை ருசி!!

அறையினில் களைப்புடன் வருவதால்
எரிச்சலுடன் சமையல் ;
காணாமல் போகும் பாசம்!!

கொதிகலனில் இருக்கும்
என் இதயமோ;
கொதித்துக் கொண்டிருக்க;
உன்னை நினைத்துக் கொண்டிருக்க!!

மணமாகி பல வருடத்தில்
சில மாதம் மட்டுமே 
நாம் இருவராக!!

எத்தனையோ முறை
உறக்கத்தில் உளறல்
உன் பெயரினை!!

தெரிந்தாலும் நகைப்பதில்லை
என் நண்பர்கள்...
ஒவ்வொருவரின் மனதிலும்;
நாமும் உரைத்திருப்போமோ மறந்து!!

புதியதாய் கற்றுள்ளேன்
போர்வைக்குள் புகுந்து அழ!!
கசங்கிய இதயமும்
கசக்கிய கண்ணீருடன் ;
தண்ணீருக்காக எழுந்தேன்;
அத்துனை நண்பர்களின்
முகமும் போர்வைக்குள்;

குலுங்கிய போர்வைக் கண்டு
எண்ணிக்கொள்வேன்  நான்,
அவர்கள் இத்யம் மட்டும் என்ன
இரும்பினாலா உள்ளது!!!

2 comments:

  1. வார்த்தைகளில்லை ... தொண்டைகுழி அடைத்துகொள்கிறது அழக்கூட முடியாமல் .. வரிகள் ஒவ்வொன்றும் எதார்த்தம்...

    ReplyDelete
  2. 'குலுங்கிய போர்வைக் கண்டு எண்ணிக் கொள்வேன் நான்'- அருமையான வரிகள்..

    ReplyDelete