ஒவ்வாமை!!

தட்டிக் கேட்க யாருமில்லையென
கொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;
வீழ்ந்துக்கிடக்கும் விதைகளாய் எம்
உடன் பிறவா  உயிர்கள்!

தேசம் தாண்டிப் போனாலும்
மோசம் போகும் ஒரே சமுதாயம்;
அனலோடு கொதிக்கும் குருதி
நினைவோடு நிற்கும்!

கேட்டுக் கேட்டு அழுத்துப் போன
எங்களின் ஓலம் உலகத்திற்கு;
மரத்துப் போன மனித நேயம்
துடித்து  எழும் ஆடுக்கும் மாடுக்கும் 
மட்டும்!

இறந்தாலும் இறவாத
எங்களுடைய்ய சோகம்;
மறந்துப் போன மார்க்கத்தால்
நொடிந்துப் போன எங்கள் வேகம்!

தயக்கத்தால் தள்ளாடும்
எங்கள் ஒற்றுமை;
இயக்கத்தால் எங்களுக்கு வந்த
ஒவ்வாமை!!
தட்டிக் கேட்க யாருமில்லையென
கொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;
வீழ்ந்துக்கிடக்கும் விதைகளாய் எம்
உடன் பிறவா  உயிர்கள்!

தேசம் தாண்டிப் போனாலும்
மோசம் போகும் ஒரே சமுதாயம்;
அனலோடு கொதிக்கும் குருதி
நினைவோடு நிற்கும்!

கேட்டுக் கேட்டு அழுத்துப் போன
எங்களின் ஓலம் உலகத்திற்கு;
மரத்துப் போன மனித நேயம்
துடித்து  எழும் ஆடுக்கும் மாடுக்கும் 
மட்டும்!

இறந்தாலும் இறவாத
எங்களுடைய்ய சோகம்;
மறந்துப் போன மார்க்கத்தால்
நொடிந்துப் போன எங்கள் வேகம்!

தயக்கத்தால் தள்ளாடும்
எங்கள் ஒற்றுமை;
இயக்கத்தால் எங்களுக்கு வந்த
ஒவ்வாமை!!

அடுத்த ரமலானுக்கு...

காலத்தோடு வந்துவிடு
கணவா என நீ கண்ணீர் வடித்தாலும்
கடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு!


எத்தனைமுறை பேசினாலும்
எதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;
என்றுதான் தனியுமோ நம் கொதிப்பு!


அழும் குழந்தைக்கு
அத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;
கடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே!


புத்தாடை அனுப்பி
பூரிப்பாய் நான் கேட்டாலும்;
பொல பொலவென்று கண்ணீரால்
வாயடைத்துவிடுவாய் என்னை!


கனைத்துவிட்டு
கனத்த இதயத்துடன்
காதோடு சொன்னேன்
அடுத்த ரமலானுக்கு...
பொய்யென்று தெரிந்தும்!!!
காலத்தோடு வந்துவிடு
கணவா என நீ கண்ணீர் வடித்தாலும்
கடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு!


எத்தனைமுறை பேசினாலும்
எதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;
என்றுதான் தனியுமோ நம் கொதிப்பு!


அழும் குழந்தைக்கு
அத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;
கடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே!


புத்தாடை அனுப்பி
பூரிப்பாய் நான் கேட்டாலும்;
பொல பொலவென்று கண்ணீரால்
வாயடைத்துவிடுவாய் என்னை!


கனைத்துவிட்டு
கனத்த இதயத்துடன்
காதோடு சொன்னேன்
அடுத்த ரமலானுக்கு...
பொய்யென்று தெரிந்தும்!!!

கருவருக்க களம் காணுவோம்..

எதிரிகள் கொத்துக் கொத்தாய்
கொலை செய்துப் பார்க்க
ஆய்வுக்கூடமாய் நாங்கள்!

உலக வரலாற்றில்
உறைந்துப் போன உதிரம்;
விழித்திருக்கும் போதே
களவுக் கொடுத்த சரித்திரம்!

இனி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்
தக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த
உள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்!

வறட்சிகண்ட பூமியை இனி
மிரட்சிக்கொள்ள வைப்போம்;
ஆயுதம் தாங்கிய படைக்கெதிராக
ஆயத்தமாகி நிற்போம்!

நனைந்த கண்களோடு
இணைந்த கைகளோடு
களம் காண செல்வோம்!
பயந்துப் போன சமுதாயமல்ல என
வியந்துப் போக வைப்போம்!

உரிமையை மீட்டெடுக்க
மாண்டுப்போனால் மகத்தான சுவர்க்கமுண்டு;
கருவறுக்க களம் காணுவோம்
அண்ணல் நபி போதனைக்களைக்கொண்டு!
எதிரிகள் கொத்துக் கொத்தாய்
கொலை செய்துப் பார்க்க
ஆய்வுக்கூடமாய் நாங்கள்!

உலக வரலாற்றில்
உறைந்துப் போன உதிரம்;
விழித்திருக்கும் போதே
களவுக் கொடுத்த சரித்திரம்!

இனி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்
தக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த
உள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்!

வறட்சிகண்ட பூமியை இனி
மிரட்சிக்கொள்ள வைப்போம்;
ஆயுதம் தாங்கிய படைக்கெதிராக
ஆயத்தமாகி நிற்போம்!

நனைந்த கண்களோடு
இணைந்த கைகளோடு
களம் காண செல்வோம்!
பயந்துப் போன சமுதாயமல்ல என
வியந்துப் போக வைப்போம்!

உரிமையை மீட்டெடுக்க
மாண்டுப்போனால் மகத்தான சுவர்க்கமுண்டு;
கருவறுக்க களம் காணுவோம்
அண்ணல் நபி போதனைக்களைக்கொண்டு!

அழுகையோடு..

விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..

ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...

மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
Money கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..

எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த ஆறுதல்..

மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;
விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு
கண்ணீராய் உன் நினைவுகள்..

ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு
சொந்தங்களை விட்டு விட்டு...

மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
Money கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..

வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும்
நொந்துப் போகும் மனது..

எந்திரமான வாழ்க்கைக்கு
தந்திரமாய் நீ தரும்
அழுகையோடு சேர்ந்த ஆறுதல்..

மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம்
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;

வளைகுடா....


வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா;

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்....

வளைந்துக் கொடுடா
என்பதின் சூட்சமம்தானோ
வளைகுடா;

வறண்டுப் போன
வாழ்க்கைக்கு
விவசாயம் செய்ய ஏற்ற இடம்
பாலைவனம்....

பாலஸ்தீன்....

கண்ணீருண்டு அதற்க்கொரு
கதையுமுண்டு;
விழிப்பிதிங்கி நிற்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..
கண்ணீருண்டு அதற்க்கொரு
கதையுமுண்டு;
விழிப்பிதிங்கி நிற்கும்
வரலாறும் விக்கித்துப் போகும்..

கற்களோடு காட்சித்தரும்
கண்மணிகள்;
வெட்கத்தோடு குருதிப் பார்க்கும்
குண்டு மழைகள்..

கருணையாளனே!!

கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;

வெறுங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!

முட்டியக் கண்ணீர்
பூமியை முத்தமிடுவதற்க்கு முன்னே  
தட்டியப் பொடியாய்
தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!

ஒட்டு மொத்த நன்மையும்
தட்டிப் பறிக்க தேவையில்லை என
திறந்து விட்டாய் இப்புனித மாதத்தை!

அடுத்தவரைப் பதம் பார்த்தே
பழகிப்போன என் நாவை;
அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!

வேகமாய் ஓடும் நாட்களை எண்ணி
சோகமாய் என் மனம் – விரைவில்
போய்விடுமோ பொக்கிஷமான
புனித மாதம்!

நெற்றியால் பூமியை முத்தமிட்டு; 
உரைக்கின்றேன்  உன் துதியை!

முட்டி நிற்கும்
முஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்
கட்டிப் போட அருள் செய்வாய்
கருணையாளனே!!
கரம் ஏந்தி
கண்ணீர் சிந்துகிறேன்
கருணையாளா உன்னிடம்;

வெறுங்கையாய் திருப்பி விட
வெட்கப்படும் என்
மறையோனே!

முட்டியக் கண்ணீர்
பூமியை முத்தமிடுவதற்க்கு முன்னே  
தட்டியப் பொடியாய்
தவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை!

ஒட்டு மொத்த நன்மையும்
தட்டிப் பறிக்க தேவையில்லை என
திறந்து விட்டாய் இப்புனித மாதத்தை!

அடுத்தவரைப் பதம் பார்த்தே
பழகிப்போன என் நாவை;
அடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்!

வேகமாய் ஓடும் நாட்களை எண்ணி
சோகமாய் என் மனம் – விரைவில்
போய்விடுமோ பொக்கிஷமான
புனித மாதம்!

நெற்றியால் பூமியை முத்தமிட்டு; 
உரைக்கின்றேன்  உன் துதியை!

முட்டி நிற்கும்
முஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்
கட்டிப் போட அருள் செய்வாய்
கருணையாளனே!!

என்றாவது ஒருநாள்....


என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பழகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!


வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இளிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!

என்றாவது ஒருநாள் என
எண்ணி எண்ணி ஒடிவிட்டது
எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பழகிப் போயின
கைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்
இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்
நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு
பெருநாள் கூட வெகுதொலைவில்
நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்
உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்
வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்
பாரமாகத் தோன்றாத
நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்
நாலாவது நாளே அழுதுவிடுவாய்;
என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து
பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;
என் சந்தோஷம் என்னவென்று
உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்
நொந்து இரண்டு சொட்டுக்
கண்ணீர் மட்டும்தான்
துணையாய் கட்டிலுக்கு!!


வந்துவிடுவேன் என
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்
விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்
காணாமல் போன நம் கனவுகள்;
சோலைக்காக நம் பாசங்கள்
பாலையில் பல் இளிக்க;
நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்
கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி என
அபாய சங்கு ஊதிவிட்டு!!!

புகுந்துவிடு..

ஊமையாய் நாங்கள்
ஊனமாய் உலகம்;
உச்சக்கட்ட அயோக்கிய-நாய் யூதன்!

பித்துப் பிடித்ததினால்
பிடித்துக் கொண்டாய் கப்பலை;
திண்டாடுவோம் என நினைத்து
கொண்டாட்டமாய் அங்கே நீ!!

கண்டனம் மட்டுமே
கடைசி ஆயுதமாய்
உலக நாட்டிற்கு;

மிரட்டிப் பார்க்க
ஆயுதத்தோடு அந்நிய-நாய் ஒருவன்;
புரியாத உலக நியாயம்
மனித நேயங்களெல்லாம் மாயம்
கால காலமாய் ஆறாத எங்கள் காயம!

நிலமெல்லாம் இரத்தமாய்
நித்தம் நித்தம்;
ஓயாமல் எங்கள்
செவிகளில் மட்டும் சப்தம்!!

வீரமெல்லாம்
சோரம் போய்;
வாள்களெல்லாம்
வாசலோடு மட்டும்தான் – எங்கள்
அரபுலக மன்னர்களுக்கு!!

சரிந்துப்போன பொருளாதரத்தை
தூக்கி நிறுத்தத்
துடிக்கும் எங்கள் கண்மணிகள்;
காலாவதியாகிப் போனதா முஸ்லிம்கள்
எல்லோரும் கண்ணின் மணிகள்!

வழியெல்லாம் அடைத்து
வலிக் கொடுக்க துடிக்கிறாய்;
சத்தியம் ஒன்று என
கரம் கோர்த்துக் நின்றால் வெடிக்கிறாய்!!

என் இறுதிக்கட்ட அணுவும்
இறைவன் ஒன்றே என சொல்லும்;
ஒரு நாள் என் சமுகம் உன்னை வெல்லும்!!

தடுத்தாலும் தடம் மாற மாட்டோம்
கொடுத்தாலும் சோரம் போக மாட்டோம்
முடிவில்லாத வாழ்விற்க்கு நீ
முந்தும் முன்னே;
முனைந்துவிடு இஸ்லாத்தில் புகுந்துவிடு!!
ஊமையாய் நாங்கள்
ஊனமாய் உலகம்;
உச்சக்கட்ட அயோக்கிய-நாய் யூதன்!

பித்துப் பிடித்ததினால்
பிடித்துக் கொண்டாய் கப்பலை;
திண்டாடுவோம் என நினைத்து
கொண்டாட்டமாய் அங்கே நீ!!

கண்டனம் மட்டுமே
கடைசி ஆயுதமாய்
உலக நாட்டிற்கு;

மிரட்டிப் பார்க்க
ஆயுதத்தோடு அந்நிய-நாய் ஒருவன்;
புரியாத உலக நியாயம்
மனித நேயங்களெல்லாம் மாயம்
கால காலமாய் ஆறாத எங்கள் காயம!

நிலமெல்லாம் இரத்தமாய்
நித்தம் நித்தம்;
ஓயாமல் எங்கள்
செவிகளில் மட்டும் சப்தம்!!

வீரமெல்லாம்
சோரம் போய்;
வாள்களெல்லாம்
வாசலோடு மட்டும்தான் – எங்கள்
அரபுலக மன்னர்களுக்கு!!

சரிந்துப்போன பொருளாதரத்தை
தூக்கி நிறுத்தத்
துடிக்கும் எங்கள் கண்மணிகள்;
காலாவதியாகிப் போனதா முஸ்லிம்கள்
எல்லோரும் கண்ணின் மணிகள்!

வழியெல்லாம் அடைத்து
வலிக் கொடுக்க துடிக்கிறாய்;
சத்தியம் ஒன்று என
கரம் கோர்த்துக் நின்றால் வெடிக்கிறாய்!!

என் இறுதிக்கட்ட அணுவும்
இறைவன் ஒன்றே என சொல்லும்;
ஒரு நாள் என் சமுகம் உன்னை வெல்லும்!!

தடுத்தாலும் தடம் மாற மாட்டோம்
கொடுத்தாலும் சோரம் போக மாட்டோம்
முடிவில்லாத வாழ்விற்க்கு நீ
முந்தும் முன்னே;
முனைந்துவிடு இஸ்லாத்தில் புகுந்துவிடு!!

வாலிப வயதில்..

வாலிப வயதில்
வளைகுடா
வசந்தமாய்!

கேட்பதற்கும் இல்லை

தடுப்பதற்கும் ஆள் இல்லை!

தூரத்தில் இருப்பதினால்

குடும்பத்திற்கு கதாநாயகனாய்!
மொய்க்கும் நண்பர் கூட்டம்
மெய் சிலிர்க்க ஆட்டம் பாட்டம்!!

முறைத்துப் பார்க்கும் அத்தாவோ

முத்தமிட்டு அனுப்புகிறார்;
சண்டையிடும் உடன்பிறப்புகளோ
கண்களை கசக்குகிறார்கள்!

கஷ்டமாய் இருந்தாலும்

இஷ்டமாக உள்ளது;
வாலிப வயதில்
வளைகுடா
வசந்தமாய்!

கேட்பதற்கும் இல்லை

தடுப்பதற்கும் ஆள் இல்லை!

தூரத்தில் இருப்பதினால்

குடும்பத்திற்கு கதாநாயகனாய்!
மொய்க்கும் நண்பர் கூட்டம்
மெய் சிலிர்க்க ஆட்டம் பாட்டம்!!

முறைத்துப் பார்க்கும் அத்தாவோ

முத்தமிட்டு அனுப்புகிறார்;
சண்டையிடும் உடன்பிறப்புகளோ
கண்களை கசக்குகிறார்கள்!

கஷ்டமாய் இருந்தாலும்

இஷ்டமாக உள்ளது;

நகரமுடியாமல்...

காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!

மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!

எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!

அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!

வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!

வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!

வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!

உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!

காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!
காயாத கண்களும் கதைச்
சொல்லும் நம் உறவைப்பற்றி;
சொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி!

மாதந்தோறும் அனுப்பினாலும் பணம்;
மனம் மட்டும் இன்னும் நிறையாமல்;
மசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் – பெருமூச்சு விட
பிரசவம் என் விடுமுறைதானோ!!

எந்திர வாழ்க்கை
எதற்கெடுத்தாலும் நேரம்தான் இங்கே;
கும்மாளமாய் குளிக்க நினைத்தாலும்
குரல்களால் மிரட்டலிடும் ஒரு
கூட்டம் கதவினருகில்!!

அத்தனை பரபரப்பிலும்
அலுக்காமல் அணைப்பது உன்
நினைவுகள் மட்டும்தான் நிழலாய்!!

வகை வகையாய் உண்டாலும்
வராது உன் கைப்பக்குவம்;
உண்டு உருண்டுப் படுத்தாலும்
சுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்!!

வண்ண வண்ணமாய்
வாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;
பதில் கேட்டால் பளிச்சென்று
கேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;
நான் எப்படிக் கட்டிக்கொள்ள!

வருஷக் கணக்காய் இருந்தாலும்
வங்கி கணக்கில் ஒன்றுமில்லை;
வருஷத்திற்கு ஒரு முறை
வந்துப் போவதால்
வயல் வேலையே பரவாயில்லை!!

உனக்கு நான் ஆடையாய்
எனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;
இஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்!!

காதோடு நரை விழுந்தப் பின்னும்
நகரமுடியாமல் பலப்பேர் இங்கே;
மனைவிக்குப்பதில் மாற்றமாய்
மருந்துப்பாட்டில்தான் துணையாய்;
வளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்!!!

மரணம் ஒன்றே....

வெடிக்கின்ற சப்தத்தால்
வடிக்கின்ற விழிகள்;
காலங்கள் ஆனாலும்
காயம் மட்டும் ரணமாய்
காதோடு முணு முணுக்கும்!!

உறைந்தாலும் இரத்தம்
உறங்காது எங்கள்
உரிமைக் குரல்!!

எங்களை துரத்தாத நாடில்லை
தடுக்க எந்த நாதியும் இல்லை;
வெற்றுக்காகிதத்தில்
வெள்ளை மாளிகை அறிக்கை;
தீராத உன் வேட்கை!!

கயவர்கள் கரம் கோர்த்து
கண்டன அறிக்கை;
புறம் பார்க்க
புறம் தள்ளினாய்
புர்க்காவை!

வறண்டுப் போன வாயினில்
என் தாடிக்காக
உன் தொண்டைக் குழியில்
எச்சில் ஏறி இறங்கும்;

மனம் நிறைய
பயம் கொண்டு
ஏளனமாய் நகைக்கிறாய்
ஏகாதிபத்திய அரசு என்று!!

வார்த்தைக்கு வார்த்தை
வல்லரசு – இனி
வரலாறு மட்டும்தான் அப்படி;
வாசிக்க இருக்க மாட்டாய் நீ!!

அடக்கிவிடலாம் என
ஆணவத்தில் நீ;
இறை வழியில்
மரணம் ஒன்றே
மறுத் தீர்வாய் நாங்கள்!!

ஒயாது இந்த போராட்டம்
ஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;
இரத்தத்தோடு யுத்தகளத்தில் நின்றாலும்
மண்டியிடுவது என்னவோ நாங்கள்
மறையோன் ஒருவனுக்குத்தான்!!
வெடிக்கின்ற சப்தத்தால்
வடிக்கின்ற விழிகள்;
காலங்கள் ஆனாலும்
காயம் மட்டும் ரணமாய்
காதோடு முணு முணுக்கும்!!

உறைந்தாலும் இரத்தம்
உறங்காது எங்கள்
உரிமைக் குரல்!!

எங்களை துரத்தாத நாடில்லை
தடுக்க எந்த நாதியும் இல்லை;
வெற்றுக்காகிதத்தில்
வெள்ளை மாளிகை அறிக்கை;
தீராத உன் வேட்கை!!

கயவர்கள் கரம் கோர்த்து
கண்டன அறிக்கை;
புறம் பார்க்க
புறம் தள்ளினாய்
புர்க்காவை!

வறண்டுப் போன வாயினில்
என் தாடிக்காக
உன் தொண்டைக் குழியில்
எச்சில் ஏறி இறங்கும்;

மனம் நிறைய
பயம் கொண்டு
ஏளனமாய் நகைக்கிறாய்
ஏகாதிபத்திய அரசு என்று!!

வார்த்தைக்கு வார்த்தை
வல்லரசு – இனி
வரலாறு மட்டும்தான் அப்படி;
வாசிக்க இருக்க மாட்டாய் நீ!!

அடக்கிவிடலாம் என
ஆணவத்தில் நீ;
இறை வழியில்
மரணம் ஒன்றே
மறுத் தீர்வாய் நாங்கள்!!

ஒயாது இந்த போராட்டம்
ஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;
இரத்தத்தோடு யுத்தகளத்தில் நின்றாலும்
மண்டியிடுவது என்னவோ நாங்கள்
மறையோன் ஒருவனுக்குத்தான்!!

எதிரிக்கு மட்டும்...

அறிவுரைகள் எல்லாம்
அடுத்தவருக்குத்தான்;
எதிர்த்துக் கேள்விக் கேட்டால்
எரிமலையாய் வெடித்திடுவோம்!

விளக்கம் கொடுப்பதற்கு முன்னமே
குதர்க்கமாய் கனைகள் தொடுத்திடுவோம்;
கிடைத்ததற்கு பின்னே
கிண்டலாய் முடித்திடுவோம்!!

செய்தவை யாவையும்
செய்தித்தாளில் போட்டு விடுவோம்;
செய்தவர் யாரென்று அதிலும்
போட்டியிடுவோம்!!

ஓரிறையென்று
ஓயாது ஒலித்திடுவோம்;
உள்ளே வந்தப்பின்னே
உனக்கா எனக்கா என
ஒருக் கைப்பார்த்திடுவோம்!!

ஒன்றுப் பட்ட சமுதாயம் என
ஓங்கி ஓங்கி முழங்கிடுவோம்;
விளக்கம் என்றுக் கேட்டால்
குறுந்தகடு வழங்கிடுவோம்!!

ஒன்றாகவே முடியாதா
ஓர் தலைமையில்;
கேட்டதுத்தான் தாமதம்
இடிவந்து விழும் தலையில்!!

இணக்கம் என்றால் கட்டிக்கொள்வோம்
பிணக்கு என்றால் முட்டித்தள்ளுவோம்!
மார்க்கம் என்று மாறி மாறி அழைத்திடுவோம்;
தர்க்கம் செய்தே சேற்றை மாறி மாறி பூசிடுவோம்!

கட்டியணைத்து வெட்டிவிடுவோம்
பகைமையை;
மார்தட்டி சொல்லுவோம்
மார்க்கத்தின் மகிமையை!!

இயக்கமாக இருந்தாலும்
இணக்காமாக இருந்திடுவோம்;
எரிமலையாக இருப்போம்
எதிரிக்கு மட்டும்;
அறிவுரைகள் எல்லாம்
அடுத்தவருக்குத்தான்;
எதிர்த்துக் கேள்விக் கேட்டால்
எரிமலையாய் வெடித்திடுவோம்!

விளக்கம் கொடுப்பதற்கு முன்னமே
குதர்க்கமாய் கனைகள் தொடுத்திடுவோம்;
கிடைத்ததற்கு பின்னே
கிண்டலாய் முடித்திடுவோம்!!

செய்தவை யாவையும்
செய்தித்தாளில் போட்டு விடுவோம்;
செய்தவர் யாரென்று அதிலும்
போட்டியிடுவோம்!!

ஓரிறையென்று
ஓயாது ஒலித்திடுவோம்;
உள்ளே வந்தப்பின்னே
உனக்கா எனக்கா என
ஒருக் கைப்பார்த்திடுவோம்!!

ஒன்றுப் பட்ட சமுதாயம் என
ஓங்கி ஓங்கி முழங்கிடுவோம்;
விளக்கம் என்றுக் கேட்டால்
குறுந்தகடு வழங்கிடுவோம்!!

ஒன்றாகவே முடியாதா
ஓர் தலைமையில்;
கேட்டதுத்தான் தாமதம்
இடிவந்து விழும் தலையில்!!

இணக்கம் என்றால் கட்டிக்கொள்வோம்
பிணக்கு என்றால் முட்டித்தள்ளுவோம்!
மார்க்கம் என்று மாறி மாறி அழைத்திடுவோம்;
தர்க்கம் செய்தே சேற்றை மாறி மாறி பூசிடுவோம்!

கட்டியணைத்து வெட்டிவிடுவோம்
பகைமையை;
மார்தட்டி சொல்லுவோம்
மார்க்கத்தின் மகிமையை!!

இயக்கமாக இருந்தாலும்
இணக்காமாக இருந்திடுவோம்;
எரிமலையாக இருப்போம்
எதிரிக்கு மட்டும்;

எத்தனை நாளைக்கு..

எத்தனை முறை பேசினாலும்
தினமும் உன் குரலுக்காக;
உன் உள்ளம் மட்டும்
உருகி உருகி நிற்கும் என் வரவுக்காக!

மாலையானதும் எங்கள்
மடிகளில் குழந்தையாக
மடிக்கணிணி;
மணிக்கணக்கில் பேசினாலும்
மாதம் மட்டும் மந்தமாய்!!

ஏற்றாத வருமானத்தால்
இந்த வருடமும் ஏமாற்றம்-உன்னை
அழைத்துவிடுகிறேன்
அடுத்தவருடமாவது ஆறுதல் மட்டும்
அடுக்கடுக்காய்!!

வடியும் உன் விழிகளுக்கு என்
வார்த்தை மட்டும் வடிகாலாய்
எத்தனை நாளைக்கு!!

சிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு
சிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;
புத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்
பூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்
பெருநாள் ஆடை!!

ஈரத்தால் நைந்துப் போன
தலையணையும்; பிய்ந்துப் போன
மனதுடன் கட்டிலின் மடியில் நான்;
இழுத்துப் போர்திக் கொண்டுப்படுத்தாலும்
இதயம் மட்டும் உருத்திக்கொண்டிருக்கும்  
உன்னையே  நினைத்துக்கொண்டிருக்கும்!!

மணமாகி வருடமாயிருந்தாலும்
எண்ணிக்கையில் அடங்கிவிடும்
உன் அருகில் நானிருந்ததை;

பரணியில் கிடந்த விடுப்போ
என்னைக்கண்டு பல் இழிக்க
வந்துவிட்டேன் நாட்டுக்கு;

அள்ளி அணைக்க
துள்ளிக் குதித்து ஒடினேன் – என்
பிள்ளையை நோக்கி;
சிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;
கொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க
நான் மட்டும் திகைத்து நிற்க!

கரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு
கண்ணிருடன் கலங்கி நின்றேன்;
எல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க
நீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க!!
எத்தனை முறை பேசினாலும்
தினமும் உன் குரலுக்காக;
உன் உள்ளம் மட்டும்
உருகி உருகி நிற்கும் என் வரவுக்காக!

மாலையானதும் எங்கள்
மடிகளில் குழந்தையாக
மடிக்கணிணி;
மணிக்கணக்கில் பேசினாலும்
மாதம் மட்டும் மந்தமாய்!!

ஏற்றாத வருமானத்தால்
இந்த வருடமும் ஏமாற்றம்-உன்னை
அழைத்துவிடுகிறேன்
அடுத்தவருடமாவது ஆறுதல் மட்டும்
அடுக்கடுக்காய்!!

வடியும் உன் விழிகளுக்கு என்
வார்த்தை மட்டும் வடிகாலாய்
எத்தனை நாளைக்கு!!

சிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு
சிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;
புத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்
பூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்
பெருநாள் ஆடை!!

ஈரத்தால் நைந்துப் போன
தலையணையும்; பிய்ந்துப் போன
மனதுடன் கட்டிலின் மடியில் நான்;
இழுத்துப் போர்திக் கொண்டுப்படுத்தாலும்
இதயம் மட்டும் உருத்திக்கொண்டிருக்கும்  
உன்னையே  நினைத்துக்கொண்டிருக்கும்!!

மணமாகி வருடமாயிருந்தாலும்
எண்ணிக்கையில் அடங்கிவிடும்
உன் அருகில் நானிருந்ததை;

பரணியில் கிடந்த விடுப்போ
என்னைக்கண்டு பல் இழிக்க
வந்துவிட்டேன் நாட்டுக்கு;

அள்ளி அணைக்க
துள்ளிக் குதித்து ஒடினேன் – என்
பிள்ளையை நோக்கி;
சிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;
கொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க
நான் மட்டும் திகைத்து நிற்க!

கரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு
கண்ணிருடன் கலங்கி நின்றேன்;
எல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க
நீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க!!

அரிய ஆமை.

உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!

ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!

கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!

துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
நாங்களெல்லாம் அரிய ஆமை!!

மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!

வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!

வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!

ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!

வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!

கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
ஆதரவுத்தருவோம்!!!!

உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!

ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!

கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!

துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
நாங்களெல்லாம் அரிய ஆமை!!

மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!

வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!

வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!

ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!

வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!

கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
ஆதரவுத்தருவோம்!!!!

தயக்கத்திலே

பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!
பேசும் பொழுதெல்லாம் உன்
அழுகைச் சப்தம் என்னை
பேசாமல் செய்யும்!

ஆறுதல் சொல்லிச் சொல்லி
ஆண்டுகள் பல ஒடிவிட்டன!

முடித்துவிட்டு வந்துவிடு என
முத்தமிட்டுச் சொன்னப் போதும்;
அடக்கி வைத்த அழுகை மட்டும்
அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!

தூங்கிய வயிறும் வீங்கிவிட;
காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை
கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!

குழந்தைக்குப் பரப்பரப்பாய்
பெயரினை நான் தேட;
நீயோ உன் பத்தாம் மாத்திற்கு
என் விடுப்பை விரல் விட்டு
எண்ணிக் கொண்டிருந்தாய்!!

உன் இடுப்பு வலிக்கு
நான் இங்கு துடியாய் துடித்தேன்;
வியர்த்த உள்ளங்கையுடன்
என் விரல் கைப்பேசியில்;

ஒருகாலத்தில்
இனிப்புடன் என் நண்பர்கள்;
இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு
கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;
குழந்தைக்காக இனிப்பா என்று!!

அனைத்தையும் எண்ணிப்பார்க்க
நேரமில்லாமல் நான்;
இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;
இனிப்புகள் வாங்க!!

அரை மயக்கத்திலும்
அச்சு பிசாகமல் கேட்டாய்;
வரவில்லையா இன்னும்;
பதில் சொல்வதற்குள்
மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;
கைப்பேசியை துண்டித்துவிட்டு
காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!

காலம் கடந்து..

உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;

முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே

பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!
உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;

முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே

பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!

தீராத எங்கள் தாகம்

பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;

கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!
பசுத்தோல் போர்த்திய புலியாய்
அதற்கு நாங்களெல்லாம் பலியாய்!

வையகம் ஒங்கும் மார்க்கத்தின்
சொந்தக்காரர்கள் நாங்கள்;
திக்குத் தெரியாமல்
தட்டுத்தடுமாறும் தமிழர்கள்!

புலியென்று உனக்கு
பெயரிட்டவன் யாரடா – நான்
தொழும்போது என் முதுகில்
சுட்டவன் நீயடா!!

குழிப்பறித்த உனக்கு
குள்ளநரி என்பதே சரி - இனி
வரலாறு உரைக்கும் இந்த வரி!!

காலத்தால் மறைந்திருக்கும்
எங்கள் இரத்த வாடை;
மாறாமல் தோற்றமளிக்கும் உன்
தோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை!!

புலியும் சிங்கமும் உள்ள
வனத்திற்கு நடுவே எங்கள் இனம்;
குரல் கொடுக்க ஆளுண்டு
விரல் விட்டு எண்ணுமளவிற்கு!!

அரவணைக்க இடமுண்டு ஈழத்தமிழனுக்கு;
அகதிகளாவதற்குக் கூட
அருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு!

வெதும்பிய உள்ளத்துடன்
தழும்பிய விழிகளுடன்
விடுகதைக்கு விடைத்தேடி
வீதியில் நாங்கள்;

கலங்கிப் போய் நின்றாலும்
கைக் கொடுக்க எவருமில்லை;
விட்டில் பூச்சியாய்
விடுதலைக்காக ஏக்கத்திலே;
காலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே!!

இனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;
ஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்!!

ஈரமாய் என் இஸ்லாம்.....


வறண்ட பூமியில்
இரும்பாய் ஒரு கூட்டம்;
இருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை
உடைத்தப் பின்னே
உரக்க ஊளையிட்ட உலகம்!

சட்டிகள் காய்ந்து
ரொட்டிகள் மட்டுமே உணவு;
களியாட்டம் போடும்
கஞ்சாவிற்க்கு சாவுக் கொடுத்து
உள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்
அவன்தான் தாலிபன்!!

உரம் கொண்ட
உள்ளத்திற்கு
இரும்பாய் இஸ்லாம்;
கட்டிப்பிடித்தால் விட்டுக் கொடுப்போம்;
தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவோம்!!

கால காலமாய் நின்றாலும்
காணாமல் போகும் உன் வெற்றி;
ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி!!

ஒளித்து விளையாட
ஒன்றுமில்லை – எங்கள்
மார்க்கத்தை வெல்பவன்
எவனுமில்லை!!

தாடிகள் நரைத்தாலும் தளரவில்லை;
எலும்புகள் தேய்ந்தாலும் பரவாயில்லை;

மனம் குளிர அருகில்
மனைவியில்லை;
கொஞ்சி விளையாட என்
மழலைகள் இல்லை;
ஆனால்;
கலிமா என்ற கவசத்தால்
கண்டுவிட்டேன் என் சகோதரனை!
மார்தட்டி சொல்வேனடா என்
மார்க்க சகோதரன் இவன் என்று;

மண்டியிட்டு வாழ்வதைவிட
சண்டையிட்டு சாவோம்;
காய்ந்துப் போன என் பூமிக்கு
இன்னும் ஈரமாய் என் இஸ்லாம்!!

வறண்ட பூமியில்
இரும்பாய் ஒரு கூட்டம்;
இருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை
உடைத்தப் பின்னே
உரக்க ஊளையிட்ட உலகம்!

சட்டிகள் காய்ந்து
ரொட்டிகள் மட்டுமே உணவு;
களியாட்டம் போடும்
கஞ்சாவிற்க்கு சாவுக் கொடுத்து
உள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்
அவன்தான் தாலிபன்!!

உரம் கொண்ட
உள்ளத்திற்கு
இரும்பாய் இஸ்லாம்;
கட்டிப்பிடித்தால் விட்டுக் கொடுப்போம்;
தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவோம்!!

கால காலமாய் நின்றாலும்
காணாமல் போகும் உன் வெற்றி;
ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி!!

ஒளித்து விளையாட
ஒன்றுமில்லை – எங்கள்
மார்க்கத்தை வெல்பவன்
எவனுமில்லை!!

தாடிகள் நரைத்தாலும் தளரவில்லை;
எலும்புகள் தேய்ந்தாலும் பரவாயில்லை;

மனம் குளிர அருகில்
மனைவியில்லை;
கொஞ்சி விளையாட என்
மழலைகள் இல்லை;
ஆனால்;
கலிமா என்ற கவசத்தால்
கண்டுவிட்டேன் என் சகோதரனை!
மார்தட்டி சொல்வேனடா என்
மார்க்க சகோதரன் இவன் என்று;

மண்டியிட்டு வாழ்வதைவிட
சண்டையிட்டு சாவோம்;
காய்ந்துப் போன என் பூமிக்கு
இன்னும் ஈரமாய் என் இஸ்லாம்!!

காலம் போனப் பின்னே!


கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

பயந்து பலியாவதைவிட...

வீதியில் நாங்கள்
பாதியில் பயணம்;
அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;
ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;
பாதம் மட்டும்தான்!!

வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று
வீதியில் உலா வர;
சிதறி ஒடிய கூட்டதிற்குள்
குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!

அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;
கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!

கரம் சோர்ந்தாலும்
கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;
என் முட்டி இரண்டும்
பூமியை முத்தமிடுவதற்கு முன்
பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!

கனலாய் கண்ணீர்த் துளிகள்
வீழ்வதற்காக அல்ல;
என் தலைமுறை வாழ்வதற்காக!!

கற்களோடு
களத்தில் நாங்கள்;
வருத்தப்பட வேண்டிய உலகமோ
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;
அட்டைப்படம் ஜொலித்தது!!

வீழ்ந்த மழலைகளைச் சுற்றி
சூழ்ந்த கூட்டம்;
ஒளிரும் புகைப்படக் கருவியால்
மிளிரும் பக்கங்கள்;

கவிதைக்குக் கருவாய்
படத்திற்குக் கதையாய்
கட்டுரைக்கு உரையாய்
வரலாற்றுக்கு வலியாய்
செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்
பாலஸ்தீனியராக நாங்கள்;

பறித்துக் கொண்ட என் உரிமைகள
பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்
தீவிரவாதி என்று!!

இனி
வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்
பயந்து பலியாவதைவிட
பாய்ந்து புலியாவதே மேல்!!
வீதியில் நாங்கள்
பாதியில் பயணம்;
அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;
ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;
பாதம் மட்டும்தான்!!

வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று
வீதியில் உலா வர;
சிதறி ஒடிய கூட்டதிற்குள்
குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!

அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;
கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!

கரம் சோர்ந்தாலும்
கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;
என் முட்டி இரண்டும்
பூமியை முத்தமிடுவதற்கு முன்
பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!

கனலாய் கண்ணீர்த் துளிகள்
வீழ்வதற்காக அல்ல;
என் தலைமுறை வாழ்வதற்காக!!

கற்களோடு
களத்தில் நாங்கள்;
வருத்தப்பட வேண்டிய உலகமோ
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;
அட்டைப்படம் ஜொலித்தது!!

வீழ்ந்த மழலைகளைச் சுற்றி
சூழ்ந்த கூட்டம்;
ஒளிரும் புகைப்படக் கருவியால்
மிளிரும் பக்கங்கள்;

கவிதைக்குக் கருவாய்
படத்திற்குக் கதையாய்
கட்டுரைக்கு உரையாய்
வரலாற்றுக்கு வலியாய்
செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்
பாலஸ்தீனியராக நாங்கள்;

பறித்துக் கொண்ட என் உரிமைகள
பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்
தீவிரவாதி என்று!!

இனி
வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்
பயந்து பலியாவதைவிட
பாய்ந்து புலியாவதே மேல்!!

ஏதாவது செய்ய....

வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!

துக்கம் என்
தொண்டையை அறுக்க;
தோள்கொடுக்க எவருமுண்டோ என
இயக்கங்களை நான் நோக்க;
இல்லாதது கல்லாமை மட்டுமல்ல;
ஒடிந்துப் போன ஒற்றுமையும்தான்
எனப் புரிந்துக் கொள்வதற்க்குள்
புதுப் புது இயக்கங்கள்!!

எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!

அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!

மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே மைக்கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!

இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!

உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!

ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!

வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!


வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!
வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!

கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!

துக்கம் என்
தொண்டையை அறுக்க;
தோள்கொடுக்க எவருமுண்டோ என
இயக்கங்களை நான் நோக்க;
இல்லாதது கல்லாமை மட்டுமல்ல;
ஒடிந்துப் போன ஒற்றுமையும்தான்
எனப் புரிந்துக் கொள்வதற்க்குள்
புதுப் புது இயக்கங்கள்!!

எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!

அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!

மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே மைக்கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!

இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!

உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!

ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!

வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!


வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!