விழித்திருக்கும் நேரத்தில்
விழிகளை விட்டு 
கண்ணீராய் உன் நினைவுகள்..
ஆளுக்கொரு மூலையிலே
கனவுகளை நட்டு விட்டு 
சொந்தங்களை விட்டு விட்டு...
மணிக்கணக்கில் பேச நினைத்தாலும்
”Money” கணக்கில் இல்லாததால்
மலடானது நம் பேச்சு..
வருடத்திற்கு ஒரு முறை
வந்துப் போனாலும் 
நொந்துப் போகும் மனது..
எந்திரமான வாழ்க்கைக்கு 
தந்திரமாய் நீ தரும் 
அழுகையோடு சேர்ந்த ஆறுதல்..
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை;
மாற்றி அமைப்போம் 
இனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;
Tweet
அருமை... வாழ்த்துக்கள்
ReplyDelete