எனது பாஷை


தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!



தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!


4 comments:

  1. கொடிது கொடிது
    வறுமை கொடிது
    அதனினும் கொடிது
    இளமையில் வறுமை...

    படமும் கவிதையும் மனதை ஏதோ செய்கிறது நண்பரே.

    ReplyDelete
  2. என்னையும் ஏதோ செய்தது; அவைதான் விதைகளாக இங்கே கவிதைகளாக.

    ReplyDelete
  3. மனதை நெகிழச் செய்தது!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  4. நன்றி தனபாலன் அவர்களே

    ReplyDelete