பாகற்காய்


உண்ணும்போது
உதடுகள் இரண்டும்
மூக்கிற்கும்;
இமைகள இரண்டும்
புருவத்திற்கும்
புதுப் பயணம் செல்லும்;

விழுங்கும் போதே;
எனக்கு வெட்கப்பட்டு
நாவும்;
ஒதுங்கிச் செல்லும்
தொண்டையும்;
கருத்துள்ள மருத்துவம்
என்றாலும் இன்றுவரை
நான் கசாயமாக மட்டும்!

ஒராயிரம் பலன் கொண்டாலும்
ஒவ்வாமையாக எனை
ஒதுக்கித்தள்ளும் மக்கள்;
சலிப்பு வந்தாலும்
சிரித்துவிட்டுச் செல்வேன்
உண்மை கசக்கதான் செய்யும் என!

உண்ணும்போது
உதடுகள் இரண்டும்
மூக்கிற்கும்;
இமைகள இரண்டும்
புருவத்திற்கும்
புதுப் பயணம் செல்லும்;

விழுங்கும் போதே;
எனக்கு வெட்கப்பட்டு
நாவும்;
ஒதுங்கிச் செல்லும்
தொண்டையும்;
கருத்துள்ள மருத்துவம்
என்றாலும் இன்றுவரை
நான் கசாயமாக மட்டும்!

ஒராயிரம் பலன் கொண்டாலும்
ஒவ்வாமையாக எனை
ஒதுக்கித்தள்ளும் மக்கள்;
சலிப்பு வந்தாலும்
சிரித்துவிட்டுச் செல்வேன்
உண்மை கசக்கதான் செய்யும் என!

4 comments:

  1. உண்மை கசக்கதான் செய்யும் -- உண்மை சகோ...
    பாகற்காய் இன் நன்மையை உரைதிட்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. அன்பு Mums க்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நல்லவை கசப்பாய் தான் இருக்கும் நாவிற்கு, உடலுக்கோ மிக நல்லதாய் இருக்கும் ...

    நல்ல கவிதை சகோ ...

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு மிக நன்றி ஜமால் அவர்களே

    ReplyDelete