நிரந்தர வீடு



ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!


ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!

3 comments:

  1. விடைப்பெறும் நேரத்தில்
    விழிகள் ஏதோக்
    கண்ணீரால் கதைக்க;
    வாடகைக் கூட்டை
    ஜடமாக்கி – ஆவி
    நிரந்தர வீட்டை நோக்கி /////கவிதை வரிகளிப்படித்ததுமே சொல்லத்தெரியா எண்ண்க்கள் மனதை கனக்கசெய்கிரது சகோ.

    ReplyDelete
  2. நிலை இல்லா வாழ்க்கையில்
    மறுக்க முடியாத,
    மறக்க முடியாத நிகழ்வு..

    ReplyDelete
  3. கருத்துத் தெரிவித்த ஸாதிக்கா அவர்களுக்கும் Mums அவர்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete