கொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!
இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!
வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!
முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை!
கவிதை அருமை சகோ..
ReplyDelete//படைத்தவனைப் பயந்து
ReplyDeleteவாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை!//
மனசாட்சிக்கு பயன்தாலே போதும்...
நீங்கள் என்ன தவறு செய்தாலும் உங்களை சிறுக சிறுக சாகடிக்கப் போவது மனசாட்சியே
நல்ல கவிதை, எனது இந்த பதிவையும் படித்து பாருங்கள்.
ReplyDeletehttp://tamilan1001.blogspot.com/2011/09/blog-post_29.html