எழுதி முடித்தப்
பக்கங்கள் எல்லாம்
எறும்பும் ஈயும் மொய்க்கும்;
காய்ந்துப்போனக் குருதியோப்
புகைப்படத்திற்கு இரக்கமாய்!
துளைத்தத் தோட்டாக்களும்;
விழுந்தக் குண்டுகளும்;
மிச்சமின்றிப் பதம்பார்க்க;
உலக மனிதநேயமோ
வெள்ளைப் பக்கங்களில்
”மை”யினால் எங்களைத்
தடவிக்கொடுக்கும்;
அமைதி அமைதி என்று!
பெரியண்ணனின் சாவியை பகைத்துக் கொள்ள உலக அமைதி விரும்பவில்லை போலும்
ReplyDelete