நொறுங்கும் மனம்...




அத்தா என்ற
வார்த்தை மட்டும்
பரிட்சயமாய்;
வந்து நிற்கும் என்னை
வழிப்போக்கனாய் கண்டு
விழிப்பிதிங்கி
உதட்டைப் பிதுக்கும்
குழந்தை!

அத்தாம்மா
எனச் செல்லமாய்;
உன்னை அள்ள
நினைத்த எனக்கு;
உன் நகக்கீறல்கள்
பதக்கமாய்!

இப்பத்தானே;
வந்து இருக்குறாய் என
உறவினர்களின்
ஆறுதல் வார்த்தைகள்
அவமானமாய் எனக்கு;

அசடு வழியச்
சிரித்துவிட்டு;
அம்மாவிடம் கொடுக்க;
அடங்கிப்போகும்
உன் அழுகை!

வண்ண வண்ண 
விளையாட்டுச்
சாமான்கள் காட்டி;
ஆசைத்தீர அழைத்துப்
பார்ப்பேன் உன்னை;
கரத்தில் உள்ள
பொருளை வாங்க
உன் தலை
அம்மாவிடம் திரும்ப;
என் மனம் நொறுங்க!



அத்தா என்ற
வார்த்தை மட்டும்
பரிட்சயமாய்;
வந்து நிற்கும் என்னை
வழிப்போக்கனாய் கண்டு
விழிப்பிதிங்கி
உதட்டைப் பிதுக்கும்
குழந்தை!

அத்தாம்மா
எனச் செல்லமாய்;
உன்னை அள்ள
நினைத்த எனக்கு;
உன் நகக்கீறல்கள்
பதக்கமாய்!

இப்பத்தானே;
வந்து இருக்குறாய் என
உறவினர்களின்
ஆறுதல் வார்த்தைகள்
அவமானமாய் எனக்கு;

அசடு வழியச்
சிரித்துவிட்டு;
அம்மாவிடம் கொடுக்க;
அடங்கிப்போகும்
உன் அழுகை!

வண்ண வண்ண 
விளையாட்டுச்
சாமான்கள் காட்டி;
ஆசைத்தீர அழைத்துப்
பார்ப்பேன் உன்னை;
கரத்தில் உள்ள
பொருளை வாங்க
உன் தலை
அம்மாவிடம் திரும்ப;
என் மனம் நொறுங்க!

2 comments:

  1. மிக அருமை.கடைசிப் பத்தியைப்
    படிக்கையில் கொஞ்சம் கண்கலங்கியது நிஜம்
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வலிக்கும் வார்த்தைகள்.

    "வண்ண வண்ண
    விளையாட்டுச்
    சாமான்கள் காட்டி;
    ஆசைத்தீர அழைத்துப்
    பார்ப்பேன் உன்னை;
    கரத்தில் உள்ள
    பொருளை வாங்க
    உன் தலை
    அம்மாவிடம் திரும்ப;
    என் மனம் நொறுங்க!

    ReplyDelete