தாய் பாசம்


கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

4 comments:

  1. அம்மாவுக்கு ஈடு இணை எது நண்பா
    அருமையான கவிதை வாழ்த்துக்கள்
    எனது தள முகவரி
    http://mahaa-mahan.blogspot.com/2011/04/blog-post_10.html

    ReplyDelete
  2. எல்லாமே அருமையாய் உள்ளன நண்பா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என் தாயை நினைவு படுத்திய ஒரு கவிதை..... மிகவும் அருமை சகோதரரே .....

    ReplyDelete
  4. தாயின் அன்புக்கு.. தரணியில் ஈடு இணை எதுவுமில்லை....

    ReplyDelete