பொது மக்கள்


சுருங்கிக் கொண்டிருக்கும்
குடலின் சீற்றத்தால்
பசி எங்களைப் பாடாய்படுத்த;
உழைப்பதற்குப் பிழைப்புத் தேடி நான்;
பரட்டைத்தலையும் பராரி ஆடையும்
எங்களுக்கு எதிரியாய் நிற்க;
முதலாளிக்கோ ஐயம் கொடுக்க;
பணியில்லாமல் பசி பிணியுடன்
நடைப்பயணம்..

புடைத்தெடுக்கும் பசியால்
பச்சிளங்குழந்தையுடன்
பிச்சையெடுக்கச் சென்றால்
”உழைத்தால் என்ன கேடு” என
வசைப்பாடும் பொதுமக்கள்!

இந்த பொதுமக்கள் இருக்கிறாங்களே….



சுருங்கிக் கொண்டிருக்கும்
குடலின் சீற்றத்தால்
பசி எங்களைப் பாடாய்படுத்த;
உழைப்பதற்குப் பிழைப்புத் தேடி நான்;
பரட்டைத்தலையும் பராரி ஆடையும்
எங்களுக்கு எதிரியாய் நிற்க;
முதலாளிக்கோ ஐயம் கொடுக்க;
பணியில்லாமல் பசி பிணியுடன்
நடைப்பயணம்..

புடைத்தெடுக்கும் பசியால்
பச்சிளங்குழந்தையுடன்
பிச்சையெடுக்கச் சென்றால்
”உழைத்தால் என்ன கேடு” என
வசைப்பாடும் பொதுமக்கள்!

இந்த பொதுமக்கள் இருக்கிறாங்களே….


2 comments: