உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத் 
திரையிடச் சொல்வதுப் பிழையா!
விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு 
உரம் இட்டப் பின்னேப் 
படித்தாண்டத் தோன்றாதா!
பார்வை மட்டும்தானே; 
அழகைப் பார்க்கட்டும்; 
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;
பசிக்கும் பார்வைக்கு 
அணைப்போடச் சொல்லித் 
திரைப்போடச் சொல்வது சிறையா! 
மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன 
உள்ளத்தை மீட்டெடுப்பதில் 
என்ன தயக்கம்!
மற்றவர் அணிந்தால் 
வாய் மணக்க உரைக்கும்  
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால் 
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!
 
உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத் 
திரையிடச் சொல்வதுப் பிழையா!
விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு 
உரம் இட்டப் பின்னேப் 
படித்தாண்டத் தோன்றாதா!
பார்வை மட்டும்தானே; 
அழகைப் பார்க்கட்டும்; 
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;
பசிக்கும் பார்வைக்கு 
அணைப்போடச் சொல்லித் 
திரைப்போடச் சொல்வது சிறையா! 
மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன 
உள்ளத்தை மீட்டெடுப்பதில் 
என்ன தயக்கம்!
மற்றவர் அணிந்தால் 
வாய் மணக்க உரைக்கும்  
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால் 
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!
 
 
ஸலாம் சகோ யாசர்..
ReplyDeleteஅருமையான கவிதை தொகுப்பு ஹிஜாப் பற்றி..
என்ன ஒன்று எத்தனை உரைத்தாலும் புரியாது அவர்களுக்கு...
அன்புடன்
ரஜின்
மிகவும் அருமையான கவிதை....
ReplyDeleteஇத்தனையும் படித்த பின்பும் புரிவதில்லை அவர்களுக்கு , இதுதான் புதிராக உள்ளது எனக்கு !!!
ReplyDeleteநல்ல படைப்பு :)
நல்ல கவிதை நன்பா
ReplyDeleteமிக அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் :)