கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில் 
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை 
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று 
புன்னகையை உனக்குப் 
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம் 
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த 
கறை நல்லது!
கொஞ்சலோடு  விளையாடும் 
நம் பிள்ளை என் ஆடையை 
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

//கொஞ்சலோடு விளையாடும்
ReplyDeleteநம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள்
கேலியோடு என்னை
குதுகலப்படுத்தும்
கறை நல்லது!//
குழம்பு கறையை விட இந்த சூடான கறை இதமா இருக்கும். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
www.panangoor.blogspot.com