அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன் 
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும் 
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு 
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம் 
இரண்டையும் பக்குவமாய் 
திருப்பியக் காலம் அன்று! 
நீ மெத்தப் படிக்க 
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத் 
தீணியானது அன்று!
தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும் 
இணையை உன் 
கரம் சேர்த்தேன் அன்று!
இன்று 
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில் 
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து 
சேர்ந்ததா?
 
அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன் 
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!
பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும் 
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!
பள்ளிக்கு 
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம் 
இரண்டையும் பக்குவமாய் 
திருப்பியக் காலம் அன்று! 
நீ மெத்தப் படிக்க 
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத் 
தீணியானது அன்று!
தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும் 
இணையை உன் 
கரம் சேர்த்தேன் அன்று!
இன்று 
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில் 
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து 
சேர்ந்ததா?
  
 
முதியோர் இல்லமும் இல்லையென்றால்.......?
ReplyDeletehttp://mahizhampoosaram.blogspot.com/2011/01/blog-post_17.html
மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?
ReplyDelete"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும் நபி மொழி அறியா மக்களுக்கு ஓர் உணர்வு உண்டாக உயர்வான கவிதை தந்தமைக்கு நன்றி