கருவின் கரு


குமட்டலில்
குடும்பமே
குதுகலிப்பில்;
கரு எனும் அறையில்
உன்னுடை அரவணைப்பில்;
முகம் காட்டுவதற்கு முன்னே
அகத்திற்கு அறுசுவை 
உணவு பங்கீடு!

தோல்களினால் ஆன
கருவறை;
இதைவிட பாதுகாப்பன 
இடம் வேறில்லை!

உதைத்தாலும் அணைக்கிறாய்;
குமட்டவைத்தாலும் சிரிக்கிறாய்;
தொட்டுப்பார்த்துப் பூரிப்படைகிறாய்,
அத்தாவை தொடச்சொல்லி
வம்பு பண்ணுகிறாய்!

உள்ளே
நீரிலே கிடந்தாலும்;
நீ இருப்பதால்
சுகமாக;
வலி கொடுத்து
வெளியே வர
வழி தேடுவதெல்லாம்;
நான் அழுது உன்

சிரிப்பைக் காண!




குமட்டலில்
குடும்பமே
குதுகலிப்பில்;
கரு எனும் அறையில்
உன்னுடை அரவணைப்பில்;
முகம் காட்டுவதற்கு முன்னே
அகத்திற்கு அறுசுவை 
உணவு பங்கீடு!

தோல்களினால் ஆன
கருவறை;
இதைவிட பாதுகாப்பன 
இடம் வேறில்லை!

உதைத்தாலும் அணைக்கிறாய்;
குமட்டவைத்தாலும் சிரிக்கிறாய்;
தொட்டுப்பார்த்துப் பூரிப்படைகிறாய்,
அத்தாவை தொடச்சொல்லி
வம்பு பண்ணுகிறாய்!

உள்ளே
நீரிலே கிடந்தாலும்;
நீ இருப்பதால்
சுகமாக;
வலி கொடுத்து
வெளியே வர
வழி தேடுவதெல்லாம்;
நான் அழுது உன்

சிரிப்பைக் காண!



6 comments:

  1. வணக்கம்

    அருமையாக கவிதையில் சொன்னிர்கள் நான் அழுது வெளியில் வந்து உன் சிரிப்பைக் காண
    வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கான உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழர் ரூபன் அவர்களே!

      Delete
  2. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. மொய் வைக்கக்கூடிய கல்யாண மண்டபத்தை சொன்னால் வைக்க தோதுவாக இருக்கும் :)

      Delete
  3. அருமையான கவிதை...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் கவிதை வீதி செளந்தர் அவர்களே! :)

      Delete