முதலும் முடிவும்


சுகமாய் முகம் பொதித்து;
அணைத்துப்படுக்க
தலையணையும்;
சில்லெனக் காற்றும்;
இன்னும் கொஞ்சம் நேரம்
என கெஞ்சும் விழியும்;

கடுகாரத்தைக் கண்டு
முறைக்கும் கண்களும்;
அலாரத்திற்கு
அமைதிப் பேரணித்
தரும் கரமும்;
இன்னும் கொஞ்சம்;
இன்னும் கொஞ்சம்;
எத்தனை இன்பம்!

மறந்துவிட்ட மானிடனே;
நிரந்தர உறக்கம் உனக்குண்டு;
வெள்ளைத் துணி அதிலுண்டு;
சுமந்துச் செல்லத் துணையுண்டு!

எழ மறுத்த மனமும்;
தொழ மறுத்த உனையும்;
வாழ்த்தி வரவேற்க அறையுண்டு;
மண்ணறை என்ற பெயருண்டு!
கதறி நீ கரைந்தாலும்
கருணையாளன் தவிர
கேட்பார் எவருண்டு!

சுகமாய் முகம் பொதித்து;
அணைத்துப்படுக்க
தலையணையும்;
சில்லெனக் காற்றும்;
இன்னும் கொஞ்சம் நேரம்
என கெஞ்சும் விழியும்;

கடுகாரத்தைக் கண்டு
முறைக்கும் கண்களும்;
அலாரத்திற்கு
அமைதிப் பேரணித்
தரும் கரமும்;
இன்னும் கொஞ்சம்;
இன்னும் கொஞ்சம்;
எத்தனை இன்பம்!

மறந்துவிட்ட மானிடனே;
நிரந்தர உறக்கம் உனக்குண்டு;
வெள்ளைத் துணி அதிலுண்டு;
சுமந்துச் செல்லத் துணையுண்டு!

எழ மறுத்த மனமும்;
தொழ மறுத்த உனையும்;
வாழ்த்தி வரவேற்க அறையுண்டு;
மண்ணறை என்ற பெயருண்டு!
கதறி நீ கரைந்தாலும்
கருணையாளன் தவிர
கேட்பார் எவருண்டு!

2 comments:

  1. Alhamdhulillah... Really super brother. An important message and reminder. May allah's mercy, peace & blessings be on u.

    ReplyDelete
  2. ஹாருண் அவர்களுக்கு, உங்களின் துஆ விற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல இரைவன் உங்களுக்கும் நல்லருள் புரிவானாக!

    ReplyDelete