கனத்தத் தருணமும்;
வெறுத்தத் தனிமையும்;
பிரசவமாகி இன்று!
வடித்த நீரும்;
வலித்த மனதிற்கும்
இன்றோடு வயது
நானூறை எட்டி!
எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
மனதின் ஆழத்தைத் தோண்டி;
மொத்தப் பக்கங்களில்
என் பக்கத்தில்
எச்சத்தை எறிந்து
மிச்ச இடத்தை
ஆக்கிரமிப்பு செய்யும்
என் நானூறாவதுக் கவிதை!
நிமிடங்களை மென்று;
நேரங்களைத் தின்று;
கண்ணுங் கருத்துமாய்
நான் எழுதும்
நானூறாவது உண்மை!
வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் நானூறாவது கவிதைக்கு வாழ்த்துகள்!
ReplyDeletecongratulations
ReplyDelete400வது கவிதைக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஎழுத்துப் பிழைகளைத் தாண்டி;
ReplyDeleteமனதின் ஆழத்தைத் தோண்டி;
அழகாகச் சொன்னீங்க.
வாழ்த்துக்கள் சகோதரம்...
ReplyDelete