நானூறாவது கவிதை


கனத்தத் தருணமும்;
வெறுத்தத் தனிமையும்;
பிரசவமாகி இன்று!

வடித்த நீரும்;
வலித்த மனதிற்கும்
இன்றோடு வயது
நானூறை எட்டி!

எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
மனதின் ஆழத்தைத் தோண்டி;
மொத்தப் பக்கங்களில்
என் பக்கத்தில்
எச்சத்தை எறிந்து
மிச்ச இடத்தை
ஆக்கிரமிப்பு செய்யும்
என் நானூறாவதுக் கவிதை!

நிமிடங்களை மென்று;
நேரங்களைத் தின்று;
கண்ணுங் கருத்துமாய்
நான் எழுதும்
நானூறாவது உண்மை!

கனத்தத் தருணமும்;
வெறுத்தத் தனிமையும்;
பிரசவமாகி இன்று!

வடித்த நீரும்;
வலித்த மனதிற்கும்
இன்றோடு வயது
நானூறை எட்டி!

எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
மனதின் ஆழத்தைத் தோண்டி;
மொத்தப் பக்கங்களில்
என் பக்கத்தில்
எச்சத்தை எறிந்து
மிச்ச இடத்தை
ஆக்கிரமிப்பு செய்யும்
என் நானூறாவதுக் கவிதை!

நிமிடங்களை மென்று;
நேரங்களைத் தின்று;
கண்ணுங் கருத்துமாய்
நான் எழுதும்
நானூறாவது உண்மை!

6 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் நானூறாவது கவிதைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. 400வது கவிதைக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. எழுத்துப் பிழைகளைத் தாண்டி;
    மனதின் ஆழத்தைத் தோண்டி;

    அழகாகச் சொன்னீங்க.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரம்...

    ReplyDelete