குறளடி, சிந்தடி,
அளவடி, நெடிலடி
கழிநெடிலடி;
மூளைக்கு
செலுத்துகையிலே
முகமும் வியர்க்கும்!
சந்தப்பா
சிந்துப்பா
இசைப்பா வகைகளால்;
அப்பப்பா
– எழுதவே
விரல்கள்
நகராமல்;
எழுத்துக்களும்
தர்ணா போராட்டம்!
எதுகை மோனை
சீர், தளை,
அடி, தொடை
– என
அங்குலம்
அங்குலமாய்
அங்குசமாய்!
ஏக்கமாய் கலக்கமாய்
நோக்கையிலே;
பிறந்தது
புதுக்கவிதை;
வரைமுறை இல்லை;
வரையும் முறையும்
தேவையில்லை!
பத்து வரிக்கும் மிகாமல்
கவிதை முழுமையடையாது
கட்டுப்பாட்டை
உடைத்து;
விழுந்தது
புதுக்கவிதை!
சொற்களில்
புதைந்த
கவிதையை;
கருத்தில்
புதைத்து;
புடைத்தது
புதுக்கவிதை!!
சொற்களில் புதைந்த
ReplyDeleteகவிதையை;
கருத்தில் புதைத்து;
புடைத்தது புதுக்கவிதை!!
இந்த அருமையான கவிதை போலவும்...
மனம் கவர்ந்த அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி தோழர் Ramani அவர்களே!
Deleteஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்
ReplyDeletehttp://nidurseasons.blogspot.in/2014/03/blog-post_29.html