தாகம்..தாகம்..



வெடித்த நிலமும்;
வெட்டிய மரமும்;
கொளுத்தும் வெயிலும்;
பழித்துக் காட்டும்;
அப்போது நம் நாவு 
சப்தமில்லாமல் சரணடைந்து;
பாவமாய் கதறும்;
தாகம் தாகம் என்று!

சேர்த்து வைக்காத 
மழை நீரும்;
வளர்க்க மறந்த 
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு; 
நம் விக்கலைக் கண்டு!

தண்ணீர் என்று 
புத்தகத்தில் மட்டும் 
தடவிப் பார்க்கும் 
காலம் வருமுன்னே;
சுதாரித்து விடு;
இல்லையேல்;
ஒருக் குவளை நீருக்காக 
உலகம் யுத்தம் காணும்
காட்சியைக் கண்முன்னே 
ஓட விடு!


வெடித்த நிலமும்;
வெட்டிய மரமும்;
கொளுத்தும் வெயிலும்;
பழித்துக் காட்டும்;
அப்போது நம் நாவு 
சப்தமில்லாமல் சரணடைந்து;
பாவமாய் கதறும்;
தாகம் தாகம் என்று!

சேர்த்து வைக்காத 
மழை நீரும்;
வளர்க்க மறந்த 
மரமும்;
நமுட்டுச் சிரிப்போடு; 
நம் விக்கலைக் கண்டு!

தண்ணீர் என்று 
புத்தகத்தில் மட்டும் 
தடவிப் பார்க்கும் 
காலம் வருமுன்னே;
சுதாரித்து விடு;
இல்லையேல்;
ஒருக் குவளை நீருக்காக 
உலகம் யுத்தம் காணும்
காட்சியைக் கண்முன்னே 
ஓட விடு!

6 comments:

  1. சேர்த்து வைக்காத
    மழை நீரும்;
    வளர்க்க மறந்த
    மரமும்;
    நமுட்டுச் சிரிப்போடு;
    நம் விக்கலைக் கண்டு!//

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மைதான்! நீர் மேலாண்மை நம்மிடமில்லை!அருமையான கவிதை!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆரோக்கியமானக் கருத்திட்டமையிற்கு திரு ரமணி அவர்களுக்கும் திரு சுரேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. unmaithaan!

    padamum -
    kavithaiyum arumai!

    ReplyDelete
  5. SALAM,

    எனக்கு இப்போ தாகம் அடிக்குது

    புதிய வரவுகள்:
    வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க (வட்டியை ஒழிக்க முதல் அடி எடுத்துவைத்துளோம்),ரமலானே வருக -50வது பதிவு

    *திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் அறிமுக பொதுக் கூட்டம்(பதிவை படிக்கவும்),ஊர்வாசிகளுக்கு தெரிவித்து பைத்துல்மாலுக்கு உதவுங்கள்...

    உங்கள் கருத்தையும்,ஆலோசனையும் எதிர்நோக்கும் உங்கள் சகோ.

    ReplyDelete