பிறந்து இறந்த நான்



ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)


ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)

4 comments:

  1. கருத்திட்ட சீனி அவர்களுக்கும் தனபாலன் அவர்களுக்கும் மிக்க ந்ன்றி; மற்றும் இந்த கவிதைக்கு கரு கொடுத்து உதவியவரின் உண்மை சம்பவம். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்க இந்தக் கவிதை எழுதப்பட்டது. சில வருடங்களாகியும் அந்தச் சகோதிரியின் மன வேதனையை இந்தக் கவிதை சற்றுத் தணிக்கும் என்ற நம்பிக்கையில்...

    ReplyDelete