கண்பார்வைக்குக்
கிட்டும்முன்னே;
கருவறையிலே
கரைந்தவர்கள் சிலர்;
மலரும்போதே
மரணம்
நுகர்ந்தவர்கள் சிலர்;
சிறகடிக்கும் வயதில்
சிறகொடிந்தவர் சிலர்;
போகின்ற வயதா எனப்
பட்டம் வாங்கியச் சிலர்;
தள்ளாத வயதில்
தடுமாறியவர்கள் சிலர்;
அழுகையோடு அவதானித்த
உன்னைக் கண்டு
ஆர்பரிக்கும் சிரிப்பொலிக்குப்
பெயர் உன் பிறப்பு;
உன் அழுகையோடு
உறவுகளையும்
அழவைத்த உனக்குப்
பெயர் இறப்பு!



