Showing posts with label குடும்ப உறவுகள். Show all posts
Showing posts with label குடும்ப உறவுகள். Show all posts

வண்ணப்படத்திற்கு வா



அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!




அழுக்கு ஆடையும்
எண்ணை வழிந்த முகமும்;
சீவாத சிகையும்
சிரிப்பை உதிக்காத உதடும்;
குடிலில் குடும்பத்தோடு
கணவனும் மனைவியும்!

புறம் செல்ல விருந்தோ;
உறவினரைக் காண
புறமோ சென்றால்;
அழுது வடியும் முகமும்
நெடியேற்றும்
வாசனைத் திரவியமும்;
புத்தம் புது ஆடைகளோடு
பூப்பறிக்கும்!

உடையவருக்கு
காட்ட வேண்டிய
அழகை ஊருக்கும்;
ஊருக்கு காட்டக்கூடாத
தோரணையை உடையவருக்கும்!

எடுத்துச் சொல்ல
எவருமில்லை;
சொல்லிக் கொடுத்தாலும்
புரிவதில்லை;
அடுத்தென்ன நடக்குமென்று
அய்யகோ
உங்களுக்கு விளங்கவில்லை!

வலிமையிழந்த மானுடமே
வழிக்கெட்டுப் போகும்;
விழித் தடுமாறி நோக்கும்;
குரங்காய் இருந்தாலும்
மனம் கும்மாளம் போடும்;

அவனோ அவளோ;
ஆளுக்கொருவர்
ஆடையாய் இருங்கள்;
கந்தலாகிப் போனால்
கரித் துணியாக
கடைசியில்!!


எதிர்பார்த்து


உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நானும் உனது அன்னையும்;

நீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்
பாய்ந்துபோய் விழுவேன்;
எலும்புகள் திடகாத்திரமான போதே;
எல்லாம் உன் வெடிச்சிரிப்பிற்காக..

இளமையில் கல்
என்பதை உனக்கு நிறைவேற்ற;
நான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..

இன்றோ!
பார்த்து பார்த்து வளர்த்த எங்களை
பார்க்கவே மாட்டேன் என்கிறாய்;
வயதாகிவிட்டதால்; கிழடாகிவிட்டோம்;
எலும்புகளும் நரம்புகளும் ஒய்வுக்கேட்பதால்
பாராமாகிவிட்டோம் உனக்கு!

தற்போது
மெல்ல கனக்கிறது நெஞ்சம்;
என் பேரப்பிள்ளைக்காக
நீயும் பாய்ந்து விழுகிறாய்;

அவன் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்து…

உன் சின்னச் சிறு சிரிப்பிற்காக
அழுது அழுது நடிப்போம்
நானும் உனது அன்னையும்;

நீ ஒங்கி ஒர் குத்துவிட்டால்
பாய்ந்துபோய் விழுவேன்;
எலும்புகள் திடகாத்திரமான போதே;
எல்லாம் உன் வெடிச்சிரிப்பிற்காக..

இளமையில் கல்
என்பதை உனக்கு நிறைவேற்ற;
நான் கல் சுமந்தேன் அயல்தேசத்தில்..

இன்றோ!
பார்த்து பார்த்து வளர்த்த எங்களை
பார்க்கவே மாட்டேன் என்கிறாய்;
வயதாகிவிட்டதால்; கிழடாகிவிட்டோம்;
எலும்புகளும் நரம்புகளும் ஒய்வுக்கேட்பதால்
பாராமாகிவிட்டோம் உனக்கு!

தற்போது
மெல்ல கனக்கிறது நெஞ்சம்;
என் பேரப்பிள்ளைக்காக
நீயும் பாய்ந்து விழுகிறாய்;

அவன் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்து…

பிறந்து இறந்த நான்



ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)


ரணமாகும் அந்நியத் தேசத்து 
வாழ்க்கையில் - நீயும் நானும் 
மனம் வீச அப்பாவோடு!

கருவில் குட்டிக்கரணமிட்டு
முட்டிச் செல்லமாய்;
மெல்ல மெல்ல
உனை மகிழ்ச்சியில் தள்ள;
களிப்பில் உன் முகம் 
வெளுப்பாய்!

பாசம் மிகுந்த உனை;
பார்க்கத் துடித்து;
எனக்கு வழிக் கொடுக்கும் 
உன் வழியில் - நீயோ வலியில்!

அழு மூஞ்சியாய் வந்த எனை 
ஆனந்தமாய்  அணைத்தப்படி நீ ;
அரவணைப்பின் உச்சப்படியில் நான் ;

மூச்சி முட்டும்
உன் அன்பில் ;
மூச்சித் திணறி நான்;
ஒரு மணி நேரமே 
உன்னோடு உறவாடியக் 
களிப்போடுக் காலமாகிறேன்!
காரணம் நீ இல்லையம்மா 
எனும் வாக்குமூலத்தோடு!

கவிதைக்குக் கருக்கொடுத்தவர்: 
திருமதி சுதா (அமீரகம்)

தனிமை வீடு


துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU

துவண்டுப்போனச்
செல்களும்
சிலிர்த்து நிற்கும்;
எனை நீ வயிற்றில்
உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்
காதை நிரப்ப;
உறவுகள் ஆறுதல்
உரைக்க;
மருத்துவமனையில் நான்!

மரணமோ எனை;
வலியால் மிரட்ட;
யார் என அறியாத
மகப்பேறு மருத்துவர்கள்;
உன் வரவுக்காக
என் வழித்தடத்தை நோக்க;
வெட்கம் எனைக் கொல்ல;
உனக்காகதான் என
அழுகையால் எனக்கே
ஆறுதல் தழுவ;
அழகாய் நீ என் பக்கத்தில்
நான் மயக்கத்தில்!

கணக்கில்லா
முத்தத்தோடு வளர்ந்த நீ;
கணக்குப்பார்த்து எங்கள்
கணக்கை முடிக்க;
இன்று முதியோர் இல்லத்தில்
நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;
உள்ளம் உனைதான் தேடும்;
உண்டாயா உறங்கினாயா என்று!

தலைப்புத் தந்தவர்:
SABITHA - TAMILNADU

அழகு ரசம்


எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

விலையேதுமில்லை



கறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!


கறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!

உன் தாய்



மசக்கையில்,
நாற்றமும் குமட்டி;
துர்நாற்றமும் குமட்டி;
பேச்சு சப்தங்கள்
சங்கடமாய்;
முகச் சுளிப்புச்
சாதாரணமாய்;
புரியாத எரிச்சல்
என்னைத் தொற்றிக்கொள்ள;
புரிந்திருக்கும் எனக்கு
காரணம் நீதான் என்று!

முட்டிவிட்டு;
என் வயிற்றை
முட்டிக்கொண்டு – நீ
எட்டி உதைப்பதைத்
தொட்டுப்பார்த்து – என்
ரோமங்கள் எழுந்து
ஆர்பரிக்கும்;
சிலிர்த்தச் செல்கள்
அடங்க மறுக்கும்!

எதை உண்டாலும்;
எதிர்த்துத் தள்ளும்
குடலை வார்த்தையால்
சலித்துவிட்டு;
மீண்டும் உனக்காக
உண்பேன்!

முழுவதாய் உனைப்
பெறும் போது;
முழு மயக்கத்தில்
இருப்பேனோ –இல்லை;
அரை மயக்கத்தில் கிடப்பேனோ;
படாதப் பாடுப்படுத்தும்
உனைச் செல்லமாய் கிள்ளி;
சன்னமாய் சிரிக்கக்
காத்திருக்கும் உன் தாய்!


தலைப்புத் தந்தவர்:



RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science


மசக்கையில்,
நாற்றமும் குமட்டி;
துர்நாற்றமும் குமட்டி;
பேச்சு சப்தங்கள்
சங்கடமாய்;
முகச் சுளிப்புச்
சாதாரணமாய்;
புரியாத எரிச்சல்
என்னைத் தொற்றிக்கொள்ள;
புரிந்திருக்கும் எனக்கு
காரணம் நீதான் என்று!

முட்டிவிட்டு;
என் வயிற்றை
முட்டிக்கொண்டு – நீ
எட்டி உதைப்பதைத்
தொட்டுப்பார்த்து – என்
ரோமங்கள் எழுந்து
ஆர்பரிக்கும்;
சிலிர்த்தச் செல்கள்
அடங்க மறுக்கும்!

எதை உண்டாலும்;
எதிர்த்துத் தள்ளும்
குடலை வார்த்தையால்
சலித்துவிட்டு;
மீண்டும் உனக்காக
உண்பேன்!

முழுவதாய் உனைப்
பெறும் போது;
முழு மயக்கத்தில்
இருப்பேனோ –இல்லை;
அரை மயக்கத்தில் கிடப்பேனோ;
படாதப் பாடுப்படுத்தும்
உனைச் செல்லமாய் கிள்ளி;
சன்னமாய் சிரிக்கக்
காத்திருக்கும் உன் தாய்!


தலைப்புத் தந்தவர்:



RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science

அம்மா



ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!


ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!

விட்டுக்கொடுக்கிறேன்


தட்டிக் கேட்கும்
என் துணிவும்;
சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கா என்
தொணியையும்;
வளைகுடாவில்
விட்டுக்கொடுக்கிறேன்;

மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
ஒட்டியிருக்கிறேன்;
உனக்காக என் சுபாவத்தைச்
சுருட்டி வைக்கிறேன்!

பணம் தேடிப்
பாலைவனத்தில்;
சினம் தூண்டும்
மரியாதையைச்
சரணடையைச் செய்து;
விழி முழுவதும்
நீர் கோர்த்திருக்கும்
உனக்காக விட்டுக்கொடுக்கிறேன்;
நம் பிள்ளைக்காக
விற்று நிற்கிறேன்! 


கவிதைக்கு கரு தந்தவர்:
ஃபெரோஸ்கான் - முத்துப்பேட்டை

தட்டிக் கேட்கும்
என் துணிவும்;
சுயமரியாதையை
விட்டுக்கொடுக்கா என்
தொணியையும்;
வளைகுடாவில்
விட்டுக்கொடுக்கிறேன்;

மாறுப்பட்ட முகம் கொண்ட;
வேறுப்பட்ட மனம் கொண்ட;
மனிதர்களுக்கு நடுவே
ஒட்டியிருக்கிறேன்;
உனக்காக என் சுபாவத்தைச்
சுருட்டி வைக்கிறேன்!

பணம் தேடிப்
பாலைவனத்தில்;
சினம் தூண்டும்
மரியாதையைச்
சரணடையைச் செய்து;
விழி முழுவதும்
நீர் கோர்த்திருக்கும்
உனக்காக விட்டுக்கொடுக்கிறேன்;
நம் பிள்ளைக்காக
விற்று நிற்கிறேன்! 


கவிதைக்கு கரு தந்தவர்:
ஃபெரோஸ்கான் - முத்துப்பேட்டை

ஒருதலைக் காதல்


அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!

அதட்டும் 
உங்கள் குரலால் 
விலகிப்போய் அம்மாவின்
முந்தாணைக்குள் நான்! 

சிரித்து நீங்கள் 
கேட்டாலும் மனு என்னவோ 
அம்மாவின் செவிக்குத்தான்
கொடுப்பேன்! 

கண்டிப்பு எனும்
மிடுக்குடன் இருப்பதால்;
துண்டித்து நிற்கும் 
என் பார்வை 
உங்கள் முகம் பார்க்க!

தோளுக்கு மேல் வளர்ந்ததும்;
என் தோல் தொட்டுச் சொல்லும் 
அறிவுரை அழகாய் 
எனக்கு உரைத்தது;
என் மேலுள்ள உங்கள்
ஒரு தலைக்காதல் ஜொலித்தது!

முதல் காதல்


ஒட்டியிருக்கும் போது
கண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது 
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்  
முதல் காதல்!  

விலையில்லா உன் அன்பின் 
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு 
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின் 
அனாதைக் குழந்தைகளில் 
நானும் ஒருவனாய்! 

ஒட்டியிருக்கும் போது
கண் கட்டியிருந்தேன்;
எட்டியிருக்கும் போது 
என் தலை உன் மடி தேடியது!

மறக்க முடியா
மனிதநேயத்தின் பட்டியலில்
முதல் இடத்தில் இருக்கும்  
முதல் காதல்!  

விலையில்லா உன் அன்பின் 
வலையில் வீழ்ந்த நான்;
சில ஆயிரத்திற்கு 
விலைப்போய் பாலையில் இன்று!

கனக்கும் தாய் பாசத்திற்காக;
இரக்கமாய் நோக்கும்
வளைகுடாவின் 
அனாதைக் குழந்தைகளில் 
நானும் ஒருவனாய்! 

தந்தை...


சிரித்து நீ பேசினாலும்;
ஏனோ;
சில விஷயம்
அன்னையின் செவிக்கு
மட்டும் செல்லும்
என் விண்ணப்பம்!

பள்ளிச் செல்ல
மறுக்கும் எனை;
விழிகளால் விரட்டி;
விரல்களால் மிரட்டி;
அகத்தினில் சிரித்து
புறத்தினில் வெடிப்பாய்;
நான் நகர்ந்தப் பின்னே
அன்னையிடம் கூறி
நகைப்பாய்!

நினைவுப் படுத்தாதச் 
சரித்திரத்தில்;
நீங்கா இடம் உனக்கு உண்டு!
ஒளிரும் என் வெற்றிக்குள்
ஒளிந்திருக்கும் உன் தியாகம்!

சிரித்து நீ பேசினாலும்;
ஏனோ;
சில விஷயம்
அன்னையின் செவிக்கு
மட்டும் செல்லும்
என் விண்ணப்பம்!

பள்ளிச் செல்ல
மறுக்கும் எனை;
விழிகளால் விரட்டி;
விரல்களால் மிரட்டி;
அகத்தினில் சிரித்து
புறத்தினில் வெடிப்பாய்;
நான் நகர்ந்தப் பின்னே
அன்னையிடம் கூறி
நகைப்பாய்!

நினைவுப் படுத்தாதச் 
சரித்திரத்தில்;
நீங்கா இடம் உனக்கு உண்டு!
ஒளிரும் என் வெற்றிக்குள்
ஒளிந்திருக்கும் உன் தியாகம்!

கறை நல்லது


கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

கின்னியிலுள்ள 
சுடும் குழம்பு
உன் கரம் சுட;
தடுமாறி என் சட்டையில்
தடம் பதிக்க;
அச்சத்தோடு மிச்சப்பார்வையை
என் மீது நீ செலுத்த;
பரவாயில்லை என்று
புன்னகையை உனக்குப்
போர்வையாக்க;
புதைந்துக்கிடந்த நம்
அன்பு  இடம்மாறுவதற்கு   
சூழலை தந்த
கறை நல்லது!
 
கொஞ்சலோடு  விளையாடும்
நம் பிள்ளை என் ஆடையை
சூடாக நனைக்க;
சுற்றியுள்ள சொந்தங்கள் 
கேலியோடு என்னை 
குதுகலப்படுத்தும் 
கறை நல்லது!

தாய் பாசம்


கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

கொழுத்து நான் நின்றாலும் ;
உன் கண்ணிற்கு மட்டும்
மெலிந்துப் போனதேனோ ;

கருமை என்று  எல்லோருடைய
நாவும் என்னை நலம்
காணும் போது;
அள்ளி அணைத்து;
கிள்ளி உரைக்கும்
உன் நாவு எனை
அழகு என்பதேனோ;

புசிக்கும் வயிற்றுக்குப்
பசிக்கவிட்டாலும்;
படையெடுக்கும் உன் கரம்
எனக்காக உணவுத் தேடுவதேனோ;

அனலாய் காய்ச்சல்
வந்தாலும் எனை
அணைத்துக் கொண்டு
உன் விரல் என் முடிக்கு
மகுடி வாசிப்பதேனோ;

சினம் வந்து ;தடம் மாறும்
உன் குணத்தால்;
தடம் பாதிக்கும் உன் விரல்
என் முதுகில்;

வேறு யாரும் எனை
முறைக்கும் போது;
கடிக்கும் பார்வையால்
தடிக்கும் வார்த்தையால்;
எனக்கு கவசமிடுவதேனோ;

இனம்புரியாத பாசத்தால்;
இனம் காக்கும் உன் அன்பு
இனிப்பதேனோ;
இனிக்கும் தேனும்
உனைப்பற்றி  உரைக்கும் போது
முடிவாய் வருவதேனோ!

வரம் தேடும் வயது..


தவறான உறவால்
கருவிலேக் காயமாக்கி
மாயமாக்கும் ஒரு கூட்டம்!

இளவயதுதானே என்று;
காலத்தைக் காலாவதியாக்க;
மாத்திரைக் கொண்டுப்
பேறு காலத்தை
மருந்து அடிக்கும்
ஒரு கூட்டம்!

எதிர்பார்க்கும் குழந்தைக்காக;
வருடத்திற்கு ஒருமுறை;
பள்ளிக்கூடமாகும்
வீட்டுக்கூடம்!

ஏக்கத்திலேத்
தூக்கத்தைத் தொலைத்து;
மழலைக்காக மன்றாடும்
ஒரு கூட்டம்!

தவறான உறவால்
கருவிலேக் காயமாக்கி
மாயமாக்கும் ஒரு கூட்டம்!

இளவயதுதானே என்று;
காலத்தைக் காலாவதியாக்க;
மாத்திரைக் கொண்டுப்
பேறு காலத்தை
மருந்து அடிக்கும்
ஒரு கூட்டம்!

எதிர்பார்க்கும் குழந்தைக்காக;
வருடத்திற்கு ஒருமுறை;
பள்ளிக்கூடமாகும்
வீட்டுக்கூடம்!

ஏக்கத்திலேத்
தூக்கத்தைத் தொலைத்து;
மழலைக்காக மன்றாடும்
ஒரு கூட்டம்!

பொய் சொல்லலாம்...


பாசத்தைப் பிழிந்துச்;
சமையல் நீ செய்ய;
சொல்பேச்சிக் கேட்காமல்
புளிப்பும் உப்பும்;
சுவையைக் கூட்ட;
சினத்தை என் முகத்தில்
காட்டாமல்;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;
உனக்குப் பிடித்த
எண்ணத்தில் சட்டையை
என் நெஞ்சில் ஒற்றி;
அழகாயிருக்குல்ல எனும்போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

முன்பே
முடிவெடுத்துவிட்டு;
ஒப்புக்காக என் பதிலை
நீ கேட்கும் போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
சரிதான் என்று!

எனக்காகவே
என்னோடு நீ
ஒட்டியிருக்கும் போது;
உனக்காக;
உதடுகளைப் பிரிப்பதில்
தவறில்லை;
பொய்யென்றாலும்!

பாசத்தைப் பிழிந்துச்;
சமையல் நீ செய்ய;
சொல்பேச்சிக் கேட்காமல்
புளிப்பும் உப்பும்;
சுவையைக் கூட்ட;
சினத்தை என் முகத்தில்
காட்டாமல்;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

பிடிக்காத வண்ணத்தில்;
உனக்குப் பிடித்த
எண்ணத்தில் சட்டையை
என் நெஞ்சில் ஒற்றி;
அழகாயிருக்குல்ல எனும்போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
நல்லாயிருக்கு என்று!

முன்பே
முடிவெடுத்துவிட்டு;
ஒப்புக்காக என் பதிலை
நீ கேட்கும் போது;
சிரித்துக்கொண்டேச்
சொல்லலாம் பொய்;
சரிதான் என்று!

எனக்காகவே
என்னோடு நீ
ஒட்டியிருக்கும் போது;
உனக்காக;
உதடுகளைப் பிரிப்பதில்
தவறில்லை;
பொய்யென்றாலும்!

உழைத்த உன் பாதம்..


உழைத்துத்
தோய்ந்துப்போனப்
பாதங்கள் இன்னும்
ஒயாமல்;

புரண்டுப் படுத்துக்;
கட்டில் முரண்டிப்பிடித்து
எழுப்பிவிடும் என்னை;

தோளுக்கு மேல்
வளர்ந்த என்னை – உன்
பாதம் பிடிக்க;
அழைக்காமல் - நீங்கள்
அடம்பிடிக்க!

உறுத்தும் நெஞ்சத்தோடுக்;
கரத்தில் தைலத்துடன்;
தேய்த்தச் சந்தோஷத்தில்
நிம்மதியாய் உறங்குவேன்;
நான்!

வலித்தாலும் நான்
தேய்த்துவிட்டச் சந்தோஷத்தில்
நிம்மதியான உறக்கத்தில்
நீங்கள்!

உழைத்துத்
தோய்ந்துப்போனப்
பாதங்கள் இன்னும்
ஒயாமல்;

புரண்டுப் படுத்துக்;
கட்டில் முரண்டிப்பிடித்து
எழுப்பிவிடும் என்னை;

தோளுக்கு மேல்
வளர்ந்த என்னை – உன்
பாதம் பிடிக்க;
அழைக்காமல் - நீங்கள்
அடம்பிடிக்க!

உறுத்தும் நெஞ்சத்தோடுக்;
கரத்தில் தைலத்துடன்;
தேய்த்தச் சந்தோஷத்தில்
நிம்மதியாய் உறங்குவேன்;
நான்!

வலித்தாலும் நான்
தேய்த்துவிட்டச் சந்தோஷத்தில்
நிம்மதியான உறக்கத்தில்
நீங்கள்!

பாரமாய் நான்..


உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

தாய் வாசம்..


அழுது அடம்பிடிக்கும்
என்னை மிரட்டலோடு;
விரல் நீட்டி;
அள்ளி அணைப்பாய்;

என் பிஞ்சி விரல்கள்
நசுங்கிப்போகும்;
உன் உதட்டின்  
நடுவேச் சிக்கி!

நீருப்பூத்த என்
விழிகளைத் துடைத்துவிட்டு;
சில்லைறைகளால்
சமாதனம் செய்து
பள்ளிக்கு அனுப்பி;
விம்மி அழுவாய்;
நான் பார்க்காதப் போது!

அரும்பு மீசை
துளிர் விட்டாலும்;
துளியும் விடாத
உன் அன்பு!

கல்லூரிக்குள் என்
பாதம் படிந்தாலும்;
மடியாத உன்
மணமான தாய் வாசம்!

எதை நினைத்து
அழுதாயோ நான்
மணவாளனாய்
நிற்கும் போது;
குழந்தையாக நீ!

சுருக்கம் விழுந்த
உன் கைரேகை;
என் முகத்தைக் கீறினாலும்;
மாறாது என் மனம்;
மறவாது உன் மணம்!

அழுது அடம்பிடிக்கும்
என்னை மிரட்டலோடு;
விரல் நீட்டி;
அள்ளி அணைப்பாய்;

என் பிஞ்சி விரல்கள்
நசுங்கிப்போகும்;
உன் உதட்டின்  
நடுவேச் சிக்கி!

நீருப்பூத்த என்
விழிகளைத் துடைத்துவிட்டு;
சில்லைறைகளால்
சமாதனம் செய்து
பள்ளிக்கு அனுப்பி;
விம்மி அழுவாய்;
நான் பார்க்காதப் போது!

அரும்பு மீசை
துளிர் விட்டாலும்;
துளியும் விடாத
உன் அன்பு!

கல்லூரிக்குள் என்
பாதம் படிந்தாலும்;
மடியாத உன்
மணமான தாய் வாசம்!

எதை நினைத்து
அழுதாயோ நான்
மணவாளனாய்
நிற்கும் போது;
குழந்தையாக நீ!

சுருக்கம் விழுந்த
உன் கைரேகை;
என் முகத்தைக் கீறினாலும்;
மாறாது என் மனம்;
மறவாது உன் மணம்!