வெதும்பிய உள்ளத்தால்
விழிகள் தளும்பும்;
உன் நினைவுகளிலே
நெஞ்சம் மூழ்கும்;
ஒரு பிடி உண்டாலும்
உன் நினைவுகளால்
தொண்டைத் திக்கும்!
கொஞ்சம் சாப்பிடுங்க எனக்
கெஞ்சலாய் நீ
கொஞ்சும் போதெல்லாம்
முடியாது என
முறைத்தத் தருணம்
இன்று முட்டித் தள்ளுகிறது;
நெஞ்சைக் கனக்கச் செய்கிறது!